எழில் யாரை திருமணம் செய்தார் – பரபரப்பான கட்டத்தில் கயல் சீரியல் – வீடியோ இதோ

0
1832
- Advertisement -

கயல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத எழிலின் திருமணம் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து கயல் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் சீரியல் செல்கிறது.

- Advertisement -

கயல் சீரியல்:

கயல் ரோலில் சைத்ராவும், எழில் ரோலில் சஞ்சீவ் நடிக்கிறார்கள். மேலும், சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருக்கிறது. தற்போது சீரியலில் எழிலின் திருமண ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. எழில் சிறு வயதில் இருந்தே கயலை காதலித்து வருகிறார். ஆனால் கயல் எழிலை நண்பராக தான் பார்க்கிறார். பின் எப்படியோ எழில் தன்னுடைய காதலை கயலிடம் சொல்கிறார். ஆனால், கயல் குடும்ப சூழ்நிலைக்காக எழிலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறார்.

சீரியலின் கதை:

பின்பு ஒரு கட்டத்தில் கயலுக்கு எழில் மீது காதல் ஏற்படுகின்றது. கயல் அதை சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் பலரும் எதிர்பார்த்த எழிலின் திருமணம் தான் கடந்த ஒரு வாரமாக சென்று கொண்டிருக்கின்றது. எழில் ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. எழில் மணக்கோளத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது எழிலின் திருமணம் குறித்த ஒரு ட்விஸ்ட் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

-விளம்பரம்-

எழில் திருமணம்:

அதாவது, மணமேடலையில் ஆர்த்தி பக்கத்தில் எழில் மணக்கோளத்தில் அமர்ந்திருக்கிறார். ஐயர் மந்திரம் ஓதி, தாலியை எழில் கையில் கொடுக்கிறார். எழில் தாலியை கையில் எடுத்துக்கொண்டு ஆர்த்தி கழுத்தில் கட்டுவது போல் செல்கின்றார். ஆனால், திடீரென்று தாலியை கயல் கழுத்தில் கட்டி விட்டார். எழில் இப்படி செய்தது பலருக்கும் ஷாக்கிங்காக தான் இருக்கின்றது. தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

நெட்டிசன்கள் கருத்து:

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த எபிசோட் தான் இயக்குனர் கொடுத்திருக்கிறார். இருந்தாலும், கயல் கழுத்தில் எழில் தாலி கட்டியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. ஆனால், இன்னும் சுவாரசியமாக கதையை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆக மொத்தம் எழில் கயலை திருமணம் செய்து கொண்டார். இனி கயல் எழிலை ஏற்றுக் கொள்வாரா? அவருடைய மனநிலை எப்படி இருக்கும்? எழிலின் அம்மா என்ன செய்யப் போகிறார்? என்ற பல எதிர்பார்ப்புகளுடன் சீரியல் செல்ல இருக்கின்றது.

Advertisement