கலைஞர் 100 விழாவிற்கு அஜித்- விஜய் வராதது ஏன்? காரணம் ரஜினி, கமலா? வெளியான உண்மைகள்

0
206
- Advertisement -

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் அஜித்- விஜய் வராத குறித்த காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த கலைஞரின் நூற்றாண்டு விழா நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. கலைஞர் கருணாநிதி என்ற பெயரை கேட்காத நபர்கள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசியலிலும் சரி சினிமாத்துறையிலும் சரி அவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. மேலும், நேற்று முன் தினம் கலைஞரின் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

இந்த விழாவை மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா கடந்த மாதமே நடைபெறுவதாக தான் இருந்தது. ஆனால், மிக்ஸாம் புயல் மற்றும் கனமழையால் தான் இந்த நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கொண்டாடுகிறார்கள். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கலைஞரின் நூற்றாண்டு விழா:

இவருடன் இந்த விழாவில் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், இசைஞானி இளையராஜா, நயன்தாரா உட்பட திரை பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றார்கள். மிகச் சிறப்பாக இந்த விழா நடத்தப்பட்டது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சி குறித்து செய்திகள் தான் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்களாக இருக்கக்கூடியவர்கள் அஜித்- விஜய்.

வலைப்பேச்சு அந்தணன் வீடியோ:

இவர்கள் இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே இல்லை. தற்போது இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்து இருக்கிறது. இவர்கள் ஏன் வரவில்லை? என்ன பிரச்சனை? இதற்கு பின்னணி ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து பிரபல யூடியூப் விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித், விஜய் குறித்த சர்ச்சை:

அதில் அவர், கலைஞர் 100 நிகழ்ச்சியில் அஜித், விஜய் வருவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருவருமே நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த போது அஜித், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிலும், விஜய் தன்னுடைய கோட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் தகவல் வந்தது. இதனால் இவர்கள் வர முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், இரண்டு பேருமே நேற்று சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.

அஜித்-விஜய் வராத காரணம்:

அஜித் நேற்று முன்தினமே துபாயில் இருந்து சென்னைக்கு வந்து விட்டாராம். விஜய்யும் சென்னையில் தான் இருந்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர்கள் இருவருமே இந்த விழாவிற்கு வரவில்லை. காரணம், விழா அழைப்பிதழில் ரஜினி, கமலுக்கு கொடுத்த மரியாதையை விஜய் ,அஜித்திற்கு கொடுக்கவில்லையாம். இந்த கோபம் ரசிகர்களுக்கும் இருந்ததாம். தற்போது இது தான் விவாத பொருளாகவே மாறி இருக்கிறது. உண்மையில் ரஜினி, கமலுக்கு கொடுத்த மரியாதையை விஜய் அஜித்திற்கு கொடுத்திருந்தால் ஒரு வேலை அவர்கள் வந்திருப்பார்களோ? என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Advertisement