- Advertisement -
கடந்த வாரம் சனிக்கிழமை தமிழ் திரையுலகம் திரண்டு மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தியது. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் நோக்குடன் இந்த விழாவை நடத்தினர்.
-விளம்பரம்-
- Advertisement -
ஆனால் மலேசிய மக்கள் இந்த விழாவை புறக்கணித்தனர். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட எனக் கூறி இன்னும் எத்தனை விழாக்களை நடத்துவார்கள் என நினைத்துவிட்டனர் மக்கள்.
மேலும் இந்த விழாவில் அஜித், விஜய், தனுஷ், அரவிந்தசாமி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதில் அஜித்தை விழாவிற்கு அழைத்த போது, ஒரு கேள்வி கேட்டாராம்? நாமே மக்களிடம் இருந்து நிறைய சம்பாதிக்கிறோம்.
-விளம்பரம்-
நாமே பணம் போட்டு கட்டலாமே? என ஒரே ஒரு கேள்வி கேட்டுள்ளார். மேலும், மக்களிடம் இருந்து இன்னும் பணம் வாங்குவது அவருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் தான் அவர் நட்சத்திர களைவிழாவிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
Advertisement