ரேஷ்மா வெளியேற்றப்பட்டு சாக்க்ஷி காப்பாற்றப்பட்டதற்கு இது தான் காரணமா.!

0
6027
REshma
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

இதையும் பாருங்க : தொடங்கியது இந்த வார நாமினேஷன்.! லாஸ்லியாவை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.! 

மேலும், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர். இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று பலரும் எண்ணி வரும் நிலையில் தற்போது வியப்பூட்டும் திருப்பங்கள் நடந்தது. இந்த வாரம் சாக்க்ஷி தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், ரேஷ்மா வெளியேற்றபட்டார்.

-விளம்பரம்-

ரேஷ்மா இந்த வாரம் 1 கோடியே 30 லட்சம் வாக்குகள் விழுந்ததாகவும், வெறும் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் ரேஷ்மா வெளியேறியதாகவும் கமல் கூறியிருந்தார். இருப்பினும் ரசிகர்களால் இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு முக்கிய காரணமே சாக்க்ஷி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், சாக்க்ஷி சென்று விட்டால் நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்பதர்க்காக ரேஷ்மாவை திட்டமிட்டே அனுப்பிட்டனர் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், ரேஷ்மாவால் நிகழ்ச்சியில் எந்த கண்டன்ட்டும் இல்லை என்பதால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement