திருமணமான சில மாதங்களில் குட் நியூஸ் – கர்ப்பமாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் நடிகை.

0
683
naksatra
- Advertisement -

சமீபத்தில் திருமணம் முடித்த யாரடி நீ மோஹினி சீரியல் நடிகை நக்ஷாத்தரா, தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படதுடன் அறிவித்து இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நட்சத்திர கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த தொடர் நிறைவடைந்த நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் கதைப்படி நட்சத்திராவுக்கு திருமண எபிசோடு ஷூட் செய்யப்பட்டது.

-விளம்பரம்-

தற்போது உண்மையிலேயே இவருக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நக்ஸத்ரா குறித்து பேசிய அவரின் நெருங்கிய தோழியும், சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி நக்ஸத்ரா குறித்து பேசிய போது ‘நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது. நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது.

- Advertisement -

நக்ஸத்ரா குறித்து ஸ்ரீநிதி ஏற்படுத்திய சர்ச்சை :

நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றும் அவர் கூறி இருந்தார். இதுகுறித்து விளக்கமளித்த நக்ஸத்ரா ‘நான் லவ் பண்ண பையன் பேமிலி என்ன பிடிச்சி வச்சி இருக்காங்கன்னு சொல்றது எல்லாம் பொய்.

ஸ்ரீநிதி குறித்து நக்ஸத்ரா :

அவ எதோ மன அழுத்தத்தில் இருக்கிறார். அவள் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். அவள் என்மீது உள்ள அக்கரையில் அப்படி செய்துகொண்டு இருக்கிறாள். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன்’ என்று கூறி இருந்தார். ஆனால், தனது திருமணம் குறித்து எந்த தகவலையும் அவர் கூறவில்லை. இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ராவிற்கும் விஸ்வா என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் திருமணம் நடைபெற்றது.

-விளம்பரம்-

யார் இந்த விஷ்வா :

நக்ஸத்ராவை திருமணம் செய்துள்ள விஸ்வா, ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்திருக்கிறார் என்றும் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறியுள்ளனர். அவரது சகோதரி கூட சீரியல் நடிகை தானாம். அதுமட்டுமல்லாமல் விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம்.

கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ரா :

தனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்து வருவதாகவும் தாத்தாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டதால் ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக நக்ஷத்ரா கூறி இருந்தார். இப்படி பல பிரச்சனைக்கு நடுவே திருமணத்தை முடித்த நக்ஷத்ரா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்து இருக்கிறார் நக்ஷத்ரா.

Advertisement