யாரடி நீ மோகினி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது – அட இந்த கேமரா மேன் தான்.

0
1875
chiatra
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான்.இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகியசீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில்இருந்தது , ‘யாரடி நீ மோகினி’ தொடர் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன. ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்துவந்தார் . இந்த சீரியல் தற்போது 910 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்து தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு ராகேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. பிலிம் மேக்கரான இவர் ஒளிப்பதிவாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement