யோகி பாபு டப்பிங் தியேட்டர் உள்ள போய் அடிச்சேன் – அதுனால தான் இப்படி பன்றான். மேடையில் பகிர் கிளப்பிய தயாரிப்பாளர்.

0
777
yogibabu
- Advertisement -

யோகி பாபு நடித்த தாதா படத்தின் மீது இயக்குனர் துரைராஜன் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து இருந்தார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த மான் கராத்தே படத்தின் மூலம் யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

யோகி பாபு நடித்த படம் :

அதுமட்டும் இல்லாமல் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைபடத்தில் நடித்திருந்தார். இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிஸ்ட் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யோகி பாபு அவர்கள் தாதா என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தாதா சர்ச்சையில் சிக்கிய யோகி பாபு :

இந்த படத்தில் ஹீரோவாக நிதின் சத்யா நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் தாதா படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் யோகி பாபு நடித்த தாதா படத்தின் மீது இயக்குனர் துரைராஜன் அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாதா படத்தின் மீது புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் நடிகர் நிதின் சத்யா, யோகி பாபு உள்ளிட்ட பல பேரை வைத்து ஐந்து கோடி ரூபாய் செலவில் மணி என்ற படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை சென்சார் செய்து ஹார்ட் டிஸ்கில் வைத்திருந்த போது கிஷோர் என்பவர் அந்த படத்தை திருடி சென்று தாதா என்ற பெயரில் அதை வெளியிட முயற்சிக்கிறார். அதுமட்டுமில்லாமல் தாதா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார். இதனை அடுத்து துரைராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து துரைராஜாவின் வழக்கறிஞர் யோகி பாபுவிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த ஆடியோவையும் பத்திரிகை சந்திப்பில் சமர்ப்பித்து இருக்கிறார். அதில் அவர், தாதா படத்தில் நான் ஹீரோ இல்லை. நான் நடித்தது மணி படம் தான். தாதா படத்தில் நான் நடிக்கவில்லை.

அடித்துள்ள தயாரிப்பாளர் :

அந்த இயக்குனர் என்னுடைய புகைப்படத்தை போட்டு ஏன் இப்படி செய்தார்? என்று தெரியவில்லை என்று யோகிபாபு கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து தாதா படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறி இருப்பது, துரைராஜன் என்பவர் என்னுடைய படத்தில் எடிட்டராக வேலை செய்தவர். அவர் நான் எடுத்த படத்தை எடிட்டிங் செய்து வைத்து இப்படி எல்லாம் பொய் புகார் அளித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் யோகி பாபு இந்த படத்தில் நடித்திருக்கிறார். டப்பிங் பேச வராததால் எங்களுக்கும் அவருக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது அப்போது அவரை அடித்ததால் பயந்து போய் இந்த படத்துக்கு வந்து டப்பிங் பேசி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான் அவர் இந்த மாதிரி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement