‘தன்னை தொடக்கூடாதுன்னு அஜித் சொன்னார்’ – கிளப்பிவிட்ட வலைப்பேச்சு. யோகி பாபு கொடுத்த பதிலடி

0
374
- Advertisement -

வலைப்பேச்சு குழுவினர் மோசமாக விமர்சித்து பேசி இருப்பதற்கு யோகி பாபு தக்க பதிலடி கொடுத்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாகவே நடிகர் யோகி பாபு-வலைப்பேச்சு குழுவினர் இடையே நடக்கும் சர்ச்சை தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் யோகி பாபு, பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சில், நடிகர்களை மோசமாக விமர்சித்து பேசுகிறார்கள். இல்லாத விஷயத்தையும் இருக்கு என்பது போல சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

என்னைப் பற்றி கூட ரொம்ப மோசமாக பேசி இருந்தார்கள். அதற்கு நான், ஏன் இப்படி பேசுகிறீர்கள்? நீங்களும் மீடியாவில் தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, எங்களை கவனித்தால் நாங்கள் எதற்கு பேசப் போகிறோம் என்று கைகுலுக்கி பணத்தை கேட்டார்கள். நாங்கள் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இவர்களுக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கு வலைப்பேச்சு குழுவினர், நாங்கள் யோகி பாபுவிடம் பணம் கேட்டதாக பேட்டியில் சொல்லி இருந்தார். உண்மையிலேயே நாங்கள் அவரிடம் பணம் எதுவும் கேட்கவில்லை, வாங்கவும் இல்லை.

- Advertisement -

வலைப்பேச்சு சொன்ன விஷயம்:

யோகி பாபு தான் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல எதார்த்தமாக பேசி இருக்கிறார். யோகி பாபு மிகப்பெரிய திருத்தணி முருகர் பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அவரிடம் காசு வாங்கி இருந்தால் திருத்தணி கோவிலில் வந்து சத்தியம் செய்ய வேண்டும். நானும் முருகன் மீது அதிக பக்தி கொண்டவன் தான். நாங்களும் சத்தியம் செய்கிறோம். உங்களுக்கு ஒரு நாளில் இலட்சக்கணக்கில் நஷ்டம் ஆகிறது என்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு வாருங்கள். வரும்போது உங்கள் குழந்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்.

யோகி பாபு குறித்து சொன்னது:

நீங்கள் உங்கள் குழந்தையின் மீது சத்தியம் அடித்து சொல்லுங்கள், நானும் என் குழந்தை மீது சத்தியம் அடித்து சொல்கிறேன். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. இல்லாத ஒன்றை இருப்பது போல் திணிக்கக்கூடாது. இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சொன்ன விஷயத்தை தான் நாங்கள் சொல்லி இருக்கிறோம். சினிமா கோபுரத்தில் எவ்வளவு பேர் பிரபலமாக இருக்கிறார்கள். சில சமயம் சினிமா கோபுரத்தில் குப்பைகளுமே ஒட்டிக் கொள்ளும். அப்படித்தான் யோகி பாபுவும். அவர் ஒரு குப்பை.

-விளம்பரம்-

அஜித் குறித்து சொன்னது:

ஒரு முறை அஜித்தைப் பற்றி கூட யோகி பாபு மோசமாக பேசியிருந்தார். பிரபல நடிகரின் கையை யோகி பாபு பிடித்ததற்கு தொடக்கூடாது என்று ஒதுங்கி தள்ளிப் போனதாக யோகி பாபு சொல்லியிருந்தார். அவர் வேற யாரும் இல்ல அஜித் தான் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையும் ஏற்கனவே அளித்த பேட்டியில் அஜித், வீரம் படத்தில் ஒரு காட்சியில் அஜித் சார் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அடிப்பார். அந்த காட்சியில் நடிக்க கேட்டார்கள்.

யோகி பாபு கொடுத்த பதிலடி:

உடனே நான், அவர் எனக்கு சாப்பாடு போடவில்லை என்றாலும் நடிக்கிறேன் என்று சொல்லி போனேன். காட்சி எல்லாம் எடுத்து முடித்து விட்டு அஜித் என்னை கட்டிப்பிடித்து பாராட்டி இருந்தார். அவர் என்னை கட்டிப்பிடித்த உடன் அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அந்த அளவிற்கு தங்கமான நல்ல மனிதர். அதேபோல் அவர் என்னை ஒரு போட்டோ எடுத்திருந்தார். அந்த போட்டோ என்னுடைய வாழ்க்கையிலே மறக்க முடியாது என்றும் அதை யோகி பாபு பதிவிட்டு இருந்தார்.

Advertisement