வளர்ப்பு தந்தை தொல்லை, நாடகமாடும் தாய். உயிரை காப்பாற்ற போலீசிடம் புகார் அளித்த இளம் நடிகை.

0
4616
Vijayalakshmi
- Advertisement -

கன்னட மொழி திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்தவர் விஜயலட்சுமி. இவர் “ஜவாரி லவ்” என்ற படத்துடன் 15க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். தற்போது நடிகை விஜயலக்ஷ்மி “துங்கபத்ரா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஆஞ்சநேயா அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தின் போது இயக்குனர் ஆஞ்சநேயா மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இவர்களுடைய காதல் விவகாரம் விஜயலட்சுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்து உள்ளது. மேலும், இவர்களுடைய காதலுக்கு விஜயலட்சுமி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததார்கள்.

-விளம்பரம்-
எனது தாய் நாடகமாடுகிறார் : வளர்ப்பு தந்தையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; காதல் திருமணம் செய்த நடிகை விஜயலட்சுமி பேட்டி

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் விஜயலட்சுமியின் அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோர் தொடர்ந்து இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்து உள்ளனர். இயக்குனர் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே விஜயலட்சுமியின் அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பிறகு ராய்ச்சூர் மாவட்டத்தில் இயக்குனர் ஆஞ்சநேயனை, நடிகை விஜயலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த விஜயலட்சுமியின் தாய் சவிதா, பாட்டி சென்னம்மா ஆகியோர் விஷம் குடித்தனர். இதில் பாட்டி சென்னம்மா உயிர் இழந்தார். தாய் சவிதா மண்டியா அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதோடு நடிகை விஜயலக்ஷ்மியின் வளர்ப்பு தந்தை “துங்கபத்ரா’ படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்து நடிகை விஜயலக்ஷ்மி பணத்தை பெற்றுக் கொண்டு ஓடி விட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் தான் நடிகை விஜயலட்சுமி, இயக்குனரும், தனது காதல் கணவருமான ஆஞ்சனய்யாவுடன் ராய்ச்சூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு வந்து உள்ளார்கள். பின்னர் நடிகை விஜயலட்சுமி தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தனக்கும், தனது கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்து உள்ளார். இந்த திருமணத்தினால் விஜயலட்சுமி பெற்றோர்கள் இவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்து உள்ளார். தற்போது இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

இது குறித்து நடிகை விஜயலக்ஷ்மி கூறியது, நான் துங்கபத்ரா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குனர் ஆஞ்சனய்யாவுக்கும், எனக்கும் காதல் மலர்ந்தது. இது என்னுடைய குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஆஞ்சனய்யாவை திருமணம் செய்து கொண்டேன். நான் எந்த தயாரிப்பாளரிடம் இருந்தும் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றவில்லை. என்னுடைய பாட்டி இறந்திருக்க மாட்டார். என்னுடைய தாய் சவிதா நாடகம் ஆடுகிறார். என்னுடைய தாய் இதற்கு முன்பும் எனது காதல் விவகாரம் தெரிந்ததும் விஷம் குடித்தது போல் நாடகம் ஆடினார். இப்போதும் அவருக்கு என்னுடைய காதல் திருமணத்தில் விருப்பம் இல்லை.

அதனால் தற்போதும் அவர் விஷம் குடித்து விட்டதாக நாடகம் அரங்கேற்றி உள்ளார். என்னுடைய தந்தையும், தாயும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து 6 வருடங்கள் ஆகின்றன. அதோடு என்னுடைய தாயும், எனது வளர்ப்பு தந்தையும் எனக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்தினர். என்னை உடலளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்தனர். எனக்கு திருமணம் ஆகிவிட்டது தெரிந்ததும் தற்போது என்னுடைய கணவரை எனது வளர்ப்பு தந்தை கொல்ல திட்டம் தீட்டி வருகிறார். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் நிலையத்தை நாடி உள்ளளோம் என்று கூறினார்

Advertisement