யுவனின் மூன்றாவது மனைவிக்கு பிறந்த மகளா இது ? எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க . இதோ வீடியோ.

0
808
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். இப்படி இசையில் சிறப்பாக அமைந்த அவரின் சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஆம், யுவனின் திருமண வாழ்க்கை இரண்டு முறை தோல்வியில் தான் முடிந்தது.

-விளம்பரம்-

யுவன் ஷங்கர் ராஜாவிற்கு தற்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால், யுவன் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது பலர் அறிந்திராத உண்மை. யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு தனது காதலியான சுஜயா என்பவரை தனது வீட்டிற்கு தெரியாமல் ரிஜிர்ஸ்டர் திருமணம் செய்துகொண்டார். இவரை 2002 ஆம் ஆண்டு லண்டலின் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்ற போது சந்தித்து அவர் மீது காதல் கொண்டார்.

- Advertisement -

யுவனின் முதல் திருமணம் :

பின்னர் 2005 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். முதல் திருமணம் சரி வர அமையாததால் விவாகரத்துக்கு பின்னர் 4 ஆண்டுகள் சிங்கிளாக வாழ்ந்து வந்தார் யுவன். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் படு கோலாகாலமாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்னரும் பல பிரபலங்கள் வந்து இருந்தார்கள்.

இரண்டாம் மனைவி ஷில்பா :

ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் யுவனுக்கு சரிவர அமையமில்லை. யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

-விளம்பரம்-

இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்ய மதம் மாறினாரா :

பலரும் யுவன் இஸ்லாம் பெண்ணை காதலித்தால் தான் யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று கூறினர். ஆனால், மூன்றாம் திருமணம் முன்பே இஸ்லாம் மதத்தை பின் பற்றி வந்தார் யுவன். இதுகுறித்து ஒரு பேட்டியில் தெரிவித்த அவர் ‘ இசை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு ஒரு சக்தியாக இருந்தது என் அம்மா தான். அவர்கள் இறந்த பின்னர் எனக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது குரான் தான்.

யுவன் மனைவி :

என்னுடைய தேடலுக்கும் நான் நம்பிக்கை இழந்து இருந்த போது என் நம்பிக்கைக்கும் எனக்கு அதில் பதில் கிடைத்தது என்று கூறி இருந்தார். மூன்றாம் திருமணம் செய்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு கூட யுவனின் இசைச் கச்சேரி நடந்து முடிந்திருக்கிறது.அப்படி கச்சேரி முடிந்ததும் அதில் பங்குபெற்ற பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடல்கள் பாடி கொண்டாடியுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பாடவி ரக்ஷிதா தனது இன்ஸ்டாவில் அதில் யுவனின் மகளும் உள்ளார்.

Advertisement