குரானில் எனக்கு இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்ததால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறினேன் – முதன் முறையாக யுவன் பதிலடி.

0
3084
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை ஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

- Advertisement -

யுவன் ஷங்கர் ராஜா மூன்றாம் திருமணம் செய்துகொள்ள தான் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் யுவன் மனைவி ஜப்ருன் நிஷாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் தான் யுவனை நிர்பந்தித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்களா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர், நான் யுவனை சந்திப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பாகவே அவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார். மேலும், இதுபோன்ற கேள்விகளுக்கு ஒருநாள் நான் யுவனை லைவ் வர சொல்கிறேன் அதை அவரிடமே கேளுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் யுவனின் மனைவி ஜப்ருன் கூறியது போலவே தற்போது இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் யுவன், இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யுவன், இஸ்லாமில் எனக்கு ஈர்த்த விஷயம் அமைதி தான். மேலும், எனகுக்குள் ஒரு கேள்வி எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும், நாம் இறந்த பின்னர் நம் ஆத்மா எங்கு போகும் என்று கேள்வி தான் அது. மேலும், ஏழை பணக்காரன் வித்யாசம் ஏன் இங்கு இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் குரானில் எனக்கு நேரடியா பதில் கிடைத்தது போல தெரிந்தது. குரானை நான் படிக்கும் போதே பிரபஞ்சத்திற்கு ஒரு தலைவன் தான் என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்று கூறியுள்ளார் யுவன்.

-விளம்பரம்-
Advertisement