ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘அண்ணா’ . தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். இந்த வாரம், இசக்கி வீட்டை விட்டுச் சென்ற வருத்தத்தில் பாக்கியம் சமைக்காததால் , சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா கஷ்டப்படுகிறார்கள். பின், பரணி தன் அம்மாவை பார்ப்பதற்காக சாப்பாடு கொண்டு வருகிறார். அப்போது சௌந்தரபாண்டி, வாழா வெட்டி இசக்கி எப்படி இருக்கிறாள் என்று கேட்க, பரணி அவருக்கு பதிலடி கொடுத்துவிட்டு, தன் அம்மாவை சமாதானப்படுத்தி, சாப்பிட வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, சௌந்தரபாண்டியிடம், ஒரு நம்பர் வந்து சண்முகம் உங்கள் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாராமே என்று கேட்க, அவர் சண்முகம் குறித்து தப்பு தப்பாக அந்த நபரிடம் கூறுகிறார். அந்த சமயம் பார்த்து சண்முகம் அந்த இடத்திற்கு வர, இவன்லாம் ஒரு பிரசிடெண்ட் என்று சௌந்தரபாண்டி திட்டுகிறார். பின், அந்த நபர் சண்முகத்திடம் வந்து, ஒரு பொண்ணை வாழ வெட்டியாக வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டியே நியாயமா என்று கேட்க, அந்த ஐயா சௌந்தரபாண்டி என்ன செய்தார் தெரியுமா என்று வெட்டுக்கிளியிடம் இருந்து அந்தப் பிட் நோட்டீஸ் வாங்கி கொடுக்கிறார்.
அண்ணா சீரியல்:
மேலும், நேற்று எபிசோடில், ரத்னாவின் மாமியார் தன் மகன் வெங்கடேசனை ஏத்தி விட வெங்கடேஷ் ரத்னாவிடம் டாக்குமெண்டை கொடுத்து ஸ்கூலை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி கையெழுத்து போட சொல்கிறார். ஆனால், ரத்னா கையெழுத்து போட முடியாது என்று மறுக்க, வெங்கடேஷ், உனக்கு இதை விட்டா வேற வழியே இல்ல என்று ரத்னாவை மிரட்டுகிறார். அப்போது, எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் அண்ணன் வந்து நிற்பான் என ரத்னா சொல்கிறார்.
நேற்றைய எபிசொட்
அதற்கு வெங்கடேஷ், பரணி என்ன பண்ணுவாங்க? உன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இங்க தள்ளிவிட்டு போவாங்க. உன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். மறுபக்கம் , பரணிக்கு உடம்பு முடியாமல் போக, சண்முகமே டாக்டராக மாறி பரணிக்கு ரொமான்டிக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். பின், மூணு வேளை சுடுதண்ணீர் ரசம் சாதம் தான் சாப்பிடணும் என பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ரத்னா, வெங்கடேஷ் சொன்ன வார்த்தைகளால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரத்னா, வெங்கடேஷ் பேசியதும் சண்முகம் சண்டை போட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பரணி மீண்டும் அழைத்து வந்து வெங்கடேஷ் வீட்டில் விட்டு சென்றது போன்ற விஷயங்களை நினைத்துப் பார்த்து, அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான். ஆனால், எனக்கு இதை விட்டா வேற வழி தெரியவில்லை என பரணி கடலுக்குள் இறங்குகிறாள். மறுபக்கம் சண்முகம் மற்றும் பரணி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சீரியல் ட்ராக் :
அந்த சமயம் பார்த்து திடீரென்று சண்முகத்திற்கு, ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்துவிடலாம் என்று சொல்லி, பரணியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். வெங்கடேஷ் வீட்டுக்கு வந்து ரத்னாவை கேட்க, ரத்னா வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரிய வந்ததும் சண்முகம் கோவப்பட்டு அவர்களிடம் சண்டை போடுகிறார். பின், ரத்னா காணாமல் போன விஷயம் வைகுண்டம் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வர, எல்லோரும் ஒன்று சேர்ந்து ரத்னாவை தேடத் தொடங்குகின்றனர். கடைசியில் கடலுக்குள் இறங்கிய ரத்னாவின் நிலை என்ன? என்கிற பரபரப்புடன் சீரியல் முடிகிறது.