செம்பருத்தி சீரியலுக்கு வந்த சோதனையா? புலம்பி தள்ளும் ரசிகர்கள்- இது தான் காரணம்

0
689
- Advertisement -

செம்பருத்தி சீரியல் குறித்த ரசிகர்கள் புலம்பி போடும் கமெண்ட்ஸ் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக சேனலும் வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-
sembaruthi

அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 இந்த ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார்.

கார்த்திக் ராஜ் விலகியது:

இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போவதாக அறிவித்தார். மேலும், இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றது. பின் பெரிய நடிகர் மாற்றம் எதுவும் சீரியலில் நடை பெறவில்லை.

-விளம்பரம்-

செம்பருத்தி சீரியல் குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியல் 1300 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இந்த நிலையில் சமீப காலமாக சீரியல் கொஞ்சம் டல்லாக செல்வதால் ரசிகர்கள் தொடரை முடித்துவிடலாம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அகிலாண்டேஸ்வரி பார்வதியை ஏற்றுக்கொண்டார். இப்படி கிளைமேக்ஸை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக ரசிகர்கள் நினைத்து இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால், கடைசியில் அதெல்லாம் எதுவும் உண்மை இல்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

செம்பருத்தி சீரியலின் வேறு ட்ராக்:

தற்போது சீரியல் டிராக் புது கோணத்தில் பயணத்தில் கொண்டிருக்கின்றது. புவனேஸ்வரி குடும்பம் குறித்த கதை தான். இந்த சீரியலில் புதிதாக நடிகை யமுனா, ப்ரீத்தா, நடிகர் விஷ்ணு ஆகியோரும் இணையவுள்ளனர். இது குறித்து அப்டேட் போஸ்ட் ஜீதமிழ் வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து இந்த கதை பயணத்தை ரசிகர்கள் விரும்பவில்லை என்றும், அதை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்களை கொட்டி தீர்த்து வருகின்றனர். அதோடு சீரியல் கூடிய விரைவில் முடிந்தால் நன்றாக இருக்கும் எனவும் கேட்டு வருகிறார்கள்.

Advertisement