சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளர் வெளியேறி இருக்கிறார். கடந்த வாரம் இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ஆகிய மூவர் ட்ரைபில் இருந்து வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அவர்கள் மூவரும் மூன்றாம் உலகிற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் இந்திரஜா இந்த மூவரில் சேப் ஆனதால் ஸ்ருஷ்டி டாங்கேவிற்கும் காயத்ரிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கில் வெல்பவர்கள் இந்திரஜாவுடன் மோத வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் காயத்ரி மற்றும் ஸ்ருஷ்டி டாங்கேக்கு இடையிலான டாஸ்க்கில் காயத்ரி வெற்றி பெற்றதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக ஸ்ருஷ்டி டாங்கே வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருஷ்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டதாவது.
இதையும் பாருங்க : ‘நயந்தாரா கூட தன்மையா தான் இருகாங்க’ – தந்தை குறித்த கேள்விக்கு லாஸ்லியா அளித்த பதிலால் கடுப்பான ரசிகர்கள்.
சர்வைவர் ஷோ ஒரு ரியாலிட்டி ஷோ போல இருக்கலாம். ஆனால் நான் சொல்றேன் நீங்க டீவில பார்ப்பதெல்லாம் ஒண்ணுமே இல்ல. ஒரு பழமையான வாழ்க்கை முறையை வாழ்வது எளிதான காரியமல்லஇந்த நிகழ்ச்சி இரக்கமற்றது, அது உங்களை கடுமையாக தாக்கும். சொகுசான வாழ்க்கை முறையில் இருந்து பழகிய உங்கள் உடல், மனம், புத்தி என்று அனைத்தையும் கடுமையாக பாதிக்கும்.
நான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் இருக்கலாம்.ஆனால், நான் வெளியேறியதற்கு காரணம் இருக்கிறது என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார், இந்த நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்கு முன்னும் அதற்கும் பின்னும் தன் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காண்பிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவரது முகத்தில் Sun Burn ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சில நாட்கள் இருந்தவருக்கே இந்த நிலை என்றால் இந்த நிகிழ்ச்சில் கடைசி வரை இருப்பவர்கள் நிலை என்ன ஆகுமோ.