ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ‘வள்ளியின் வேலன்’ ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஸ்ரேயா நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாகவும் துணையாக நிற்கும் வேலனின் கதைதான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த வாரம், வள்ளி மீது சில ரவுடிகள் ஆசிட் அடிக்க வருகிறார்கள்.
அப்போது, வேலன் ரவுடிகளை அடித்து யாருடா இப்படி செய்ய சொன்னது எனக்கு கேள்வி கேட்க, ரஞ்சித் தான் என ரவுடிகள் சொல்கிறார்கள். உடனே வேலன், அவர்களை ரத்தினவேலுவிடம் அழைத்துச் செல்ல, அவர்கள் வேலன் மீது பழியை திருப்புகிறார்கள். எல்லோரும் வேலனை திட்ட ரத்தினவேல், வேலன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். வேலன், இது ஆசிட் தான், எல்லாரும் இதை செக் பண்ணி பாருங்க என்று அந்த ஆசிடை எடுத்துக் கொட்ட, அது வெறும் தண்ணீர் என்ன தெரிய வருகிறது. பின் ரத்தினவேல், எதுவாக இருந்தாலும் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து பண்ணு என்று வேலனை திட்டிவிட்டு உள்ள செல்கிறார்.
வள்ளியின் வேலன்:
பின் நேற்று எபிசோடில், வள்ளி காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்காக புடவையில் தேவதை போல் மேல் இருந்து கீழே இறங்கி வருகிறார். அதைப் பார்த்து, வேலன் வாய் அடைத்து நின்று கொண்டிருக்கிறார். வள்ளியை தொடர்ந்து வந்த ரத்தினவேலிடம், வேலன், போலாமா என்று கேட்கிறார். அதற்கு, ரத்தினவேலு காலேஜ் ஒருபுறம் இருக்கு, கட்சி ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கு எப்படி ஒன்றாக போக முடியும் என்று கேட்கிறார். வேலன், நீங்க காலேஜுக்கு விருந்தினராக வருவீர்கள் என்று அம்மா தான் சொன்னாங்க என்று வேதநாயகியை கை காட்டுகிறார்.
நேற்றைய எபிசொட்:
ஆனால் ரத்தினவேலு, இன்று முதலமைச்சருடன் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொல்லி தன் அக்காவை கல்லூரி விழாவுக்கு போக சொல்கிறார். அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த வள்ளியும் வேலனும், கல்லூரி முதல்வரிடம் ரத்தினவேலு வேறு வேலையாக இருக்கிறார் என்று சொன்னவுடன், கல்லூரி முதல்வர் வள்ளி இடம் வருத்தத்தோடு பேசுகிறார். பின் கல்லூரிக்கு வந்த வேதநாயகி, என் தம்பி ரத்தினவேலு தான் என்னை அவருக்கு பதிலாக அனுப்பி வைத்தார் என்று பெருமையாக மேடையில் பேசுகிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், காலேஜுக்கு சிறப்பு விருந்தினராக வந்த வேதநாயகி ரத்தினவேல் அமைச்சராக இருப்பதற்கு தான்தான் காரணம் என்பது போல் தன்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து, பேச்சுப் போட்டியில் வள்ளி கலந்து கொள்ளும் போது, ரத்தினவேல் உள்ளே நுழைகிறார். அவரைப் பார்த்து வள்ளி சந்தோஷப்பட, வேதநாயகி ஷாக் ஆகிறார்.
சீரியல் ட்ராக்:
பின், வள்ளி பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேச ரத்தினவேல் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அப்போது வள்ளியும் தன் அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதையடுத்து நடன போட்டி நடக்கிறது. அப்போது வள்ளியுடன் ஜோடியாக டான்ஸ் ஆட இருந்தவரை சரத் டீம் கடத்திவிட, வள்ளி செய்வதறியாது தவிக்கிறார். அந்த சமயம் பார்த்து வள்ளியை மேடைக்கு அழைக்க வள்ளி ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.