கடந்த சில மாதத்திற்கு முன்னர் ராயல்டி விவகாரத்தில் பிரபல பின்னணி பாடகரான எஸ் பிகும் இசைஞானி இளையராஜவிற்கும் பனிப்போர் ஏற்பட்டது. எஸ் பி தனது அனுமதியில்லாமல் தன்னுடைய பாடல்களை பாடி பணம் சம்பாதிக்கிறார் என்று இளையராஜா கடிந்திருந்தார்.
மேலும், சமீபத்தில் வெளியான 96 திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல்களால் கடுப்பான இளையராஜா அந்த படகுழவை திட்டி தீர்த்ததோடு படகுழுவினரை ஆண்மையில்லாதார்கள் என்றும் கடுமையாக சாடி இருந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து பல ரகசியங்களை கூறியுள்ளார் கங்கை அமரன்.
இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் இளையராஜாவின் பல படங்களில் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இளையராஜா ராயல்டி விவகாரத்தில் கூட கங்கையமரன் இளையராஜாவை கடுமையாக திட்டி தீர்த்திருந்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கையமரன் ஒன்றாவது வயதில் இருந்து நானும் அவரும் ஒன்றாக இருக்கிறோம். ஒரு படத்தின் இசையை கொடுத்திருக்கலாம் அதை கேட்கலாமா என்று கூறியுள்ளார். மேலும், இளையராஜா 150க்கும் மேற்பட்ட பாடல்களை எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பாளரிடம் இருந்து காப்பி அடித்ததாக கூறியுள்ளார்