குழந்தை பிறந்ததால் பிரேக் – தற்போது சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் போலீஸாக என்ட்ரி கொடுத்துள்ள மதுமிதா.

0
2208
- Advertisement -

பிக் பாஸ் மதுமிதா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெண் காமெடியன்கள் மிகவும் குறைவு. அப்படியே பெண் காமடியன்கள் இருந்தாலும் அவர்கள் ஆண் காமடியனுடன் இணைந்து நடித்தே பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் சந்தானத்துடன் இணைந்து நடித்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரமபலமானவர் ஜாங்கிரி மதுமிதா.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக மதுமிதா கலந்து கொண்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா:

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து மதுமிதா, என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார்.

Madhumitha

மதுமிதா திருமணம்:

இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுமிதா ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதே போல ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். ஆனால், சமீப காலமாக இவரை எதிலும் காண முடிவதில்லை. இதனிடையே நடிகை மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

மதுமிதா குழந்தை:

மதுமிதா இறுதியாக விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்து இருந்தார். இதன் பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் மதுமிதா படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் இந்நிலையில் மதுமிதா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுமிதா நடிக்கும் சீரியல்:

அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் இனியா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் போலீஸ் அதிகாரியாக மதுமிதா நடிக்க இருக்கிறார். தற்போது படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் மதுமிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement