முதல் ஷூட்டிங்கிற்கு அஜித்திடம் நல்ல சட்டை கூட இல்லை – அஜித் குறித்து எஸ் பி சொன்ன விஷயம் – வீடியோ இதோ.

0
2550
ajithspb
- Advertisement -

உலக அளவில் இசையில் புகழ்பெற்ற கலைஞர்களில் எஸ் பிபாலசுப்ரமணியம் ஒருவர். இவர் எம் ஜி ஆர், சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி நடிகர்களின் படத்திற்கு பாடலை பாடியவர். இவரை அனைவரும் எஸ்பிபி என்று தான் அழைப்பார்கள். இவர் 1966 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகின் மூலம் தான் முதன் முதலாக பாடத் தொடங்கினார். அதற்கு பிறகு பல மொழிகளில் தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தினார். இவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Always an inspiration to yougsters – THALA DAA…

நீங்கள் யாரும் அறியாத "தல" அஜித் குமார் அவர்களின் மறுபக்கம் !!!Always an inspiration to yougsters – THALA DAA…

Ajith Back Bones ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಜೂನ್ 7, 2020

இவர் சினிமா உலகில் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர்.இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் தன்னுடைய இசையை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தன்னுடைய இசை திறமைக்காக பல முறை தேசிய விருதுகளை பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலை பாடி உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எஸ்பிபி அவர்கள் நடிகர் அஜித் குறித்து அளித்த பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, சரணம் அஜித்தும் ஸ்கூல் நண்பர்கள். பள்ளி படிக்கும்போதே நல்ல நண்பர்கள். ஒரு முறை அஜித் விளம்பரப் படத்தில் நடிக்க நல்ல சட்டை வேண்டும் என்று சரண் சட்டை வாங்க வந்திருந்தார். அப்போ பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருப்பான். சின்ன வயசிலிருந்தே அஜித்துக்கு பைக் ரேஸில் அதிக ஆர்வம். பிறகு அஜித் காலேஜ் சென்று கொண்டிருந்தார். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் படம் இயக்கியிருந்தார்.

அவர் இயக்க ஒரு புதுமுக நடிகர் தேவை என்று என்னிடம் பேசி இருந்தார். சாக்லேட் பாயாக இல்லாமல் அவன் பார்க்க ஈர்ப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு உடனே அஜித் ஞாபகம் தான் வந்தது. அப்ப நான் அஜித் பற்றி சொன்னேன். அஜித் தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளார் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement