கைவிட்ட கணவர் மற்றும் உறவினர்கள். சொத்துக்கள் இருந்தும் அனாதையாக வாழும் கனகா.

0
138372
kanaga
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் இருந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. அதுவும் கரகாட்ட கனகா என்று சொன்னால் இன்று உள்ள இளைஞர்களுக்கு கூட தெரியும். அந்த அளவிற்கு பிரபலமானவர். நடிகை கனகா 1973 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். மேலும்,இவர் நடிகை தேவிகாவின் மகளும் ஆவார். இவருடைய தாய் தேவிகா ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் நடித்தவர். இவருடைய தாய் ஒரு சினிமா நடிகை என்பதால் இவருக்கு சினிமா துறையில் நுழைய ஈசியாக இருந்தது. இவருடைய தந்தை தேவதாஸ் ஆவார். இதனைத்தொடர்ந்து கனகா அவர்கள் கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் 425 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அதோடு கரகாட்டம் படம் என்று சொன்னாலே இன்னும் கூட அனைவரும் மனதில் ஞாபகத்தில் வருவது கனகா தான்.

-விளம்பரம்-
kanaka

- Advertisement -

மேலும்,நடிகை கனகா தன் முதல் படத்திலேயே பெரிய அளவு ஸ்டார் ஆக மாறிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் நடிகை கனகா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் சினிமா துறையில் உள்ள ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக்,விஜயகாந்த்,சரத் குமார், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் உலக நாயகன் கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவே இல்லை.

இதையும் பாருங்க : கட்டுமஸ்தாக இருந்த அரவிந்த் சாமியா இப்படி மாறிட்டார் பாருங்க. காரணம் இது தானாம்.

நடிகை கனகா அவர்கள் இதுவரை ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் கனகா அவர்கள் 90 காலங்களில் தொடங்கி 2000 வரை சினிமாவில் நடித்துக் கொண்டு தான் இருந்தார். மேலும், இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை. மேலும்,அறிய முயன்றாலும் புரியாத புதிராகவே பல திருப்பங்களுடனும், முற்றிலும் கோணங்களாகவும் தான் உள்ளது. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே முத்துக்குமார் என்ற நபர் ஒன்று இருப்பதே தெரியாத அளவிற்கு கனவாக இருந்தது.

-விளம்பரம்-

மேலும்,நடிகை கனகாவை திருமணம் செய்து கொள் என்று அவருடைய பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். அப்போது தான் கனகா எனக்கு திருமணம் நடந்தது என்ற ரகசியத்தை கூறினார். மேலும், கனகா திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்றும் தெரிவித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் பல ஆண்டுகளாகவே நடிகை கனகா அவர்கள் தனிமையில் தான் வாழ்ந்து வந்தார். பல பிரச்னைகளினாலும், மன அழுத்தத்தினாலும் கனகா பாதிக்கப்பட்டார். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு பரிதாபமாக உள்ளார். ஒரு காலத்தில் சினிமா துறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நடிகை கனகா அவர்கள் தற்போது எந்த ஒரு கவனிப்பும் இன்றி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இப்படி கவனிக்க யாரும் இல்லை என்ற காரணத்தினால் இவர் ஆலப்புழாவில் உள்ள அனாதைகள் பராமரிப்பு இல்லம் ஒன்றில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்தன.

kanaka-actress

மற்றொரு புறமோ தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் தற்போது வசித்து வருகிறார்.ஆனால் சமீப காலமாக கனகா, தனது வீட்டை உர்புறமாக பூட்டிக் கொண்டு தனிமையில் வசித்து வருகிறார். சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயத்தினால் தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறி வருகின்றனர்.

Advertisement