பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டுள்ளதால், அவரது ரசிகர்களும் படக் குழுவும் சோகத்தில் உள்ளனர். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் பஹத் பாஸில். மிகுவும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் மிகவும் கெட்டிக்காரரான நடிகர் பஹத் பாஸில். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டிரான்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் மலையன்குஞ்சு, மாலிக் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது, நடிகர் பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மூக்கில் தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள பஹத் பாசில், படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன். ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு முன்பு, ஏதோ ஒரு உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்தது அதிர்ஷ்டம் என்று மருத்துவர் சொன்னார். விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். இவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.