சண்டைக்காட்சியின் போது நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு படுகாயம் ஏற்பட்டு உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.
கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டே “பப்பி” என்ற படத்தில் நடித்தார். அதே போல இவர் பிரபு தேவாவின் ‘தேள்’ படத்திலும் நடித்து இருந்தார். பல ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருந்த இந்த படம் சமீபத்தில் தான் வெளியானது. ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது.
சம்யுக்தா ஹெக்டே திரைப்பயணம்:
இதை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மன்மத லீலை’ படத்தில் நடித்து இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து இருக்கும் இந்த படம் சமீபத்தில் தான் வெளியானது. மேலும், இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஷூட்டிங்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்யுக்தா ஹெக்டே நடிக்கும் படம்:
தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே க்ரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தின் முக்கிய சண்டைக்காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் பயன்படுத்தலாம் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.
விபத்தில் சிக்கிய சம்யுக்தா ஹெக்டே:
ஆனால், சம்யுக்தா ஹெக்டே தானே நடிப்பதாக கூறி அந்த காட்சியில் நடித்திருக்கிறார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து பயங்கரமாக அடிபட்டு இருக்கிறது. சம்யுக்தா ஹெக்டே வலியால் துடித்து இருக்கிறார். அதன்பின் சம்யுக்தா ஹெக்டேவை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வலியால் கதறிய சம்யுக்தா ஹெக்டே:
அவரது காலில் ligament tear ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்து வரும் சம்யுக்தா ஹெக்டே கால் வலி தாங்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.