அரசியலை விட்டு விலகி 7 வருஷம் ஆச்சி, ஆனாலும் சினிமாவில் நிறைய நடிக்க முடியாமல் இருக்க இதான் காரணம் – நெப்போலியன் பேட்டி.

0
583
nepolean
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.

- Advertisement -

நெப்போலியனின் குடும்பம்:

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

நெப்போலியனின் திரைப்பயணம்:

பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து நல்ல படங்களில் நெப்போலியன் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அரசியல் குறித்து கூறியிருந்தது, திமுக ஆட்சியின் செயல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

அரசியல் குரு:

நான் அரசியலில் இல்லை. அரசியலை விட்டு விலகி நான் ஏழு வருடங்கள் ஆகிறது. இன்னைக்கும் என்னைக்கும் நான் சாகும் வரையிலும் அரசியலில் எனக்கு ஒரே குரு என்றால் கலைஞர் மட்டும் தான். சினிமாவில் எனக்கு குரு பாரதிராஜா தான். அதை எப்பொழுதும் மாற்ற முடியாது. அரசியலுக்கு இனி நான் வரவே மாட்டேன். உலகத்திலேயே பெரிய தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து விட்டேன், எம்பியாகவும் இருந்து விட்டேன். இந்தியாவிற்கே மந்திரியாக இருந்தேன். இப்பொழுது குடும்பம், குழந்தையின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்.

சினிமா பட வாய்ப்பு குறித்து சொன்னது:

பகலில் என் மனைவி குழந்தைகளை பார்த்துக் கொள்வார். நான் இரவில் பார்த்துக்கொள்வேன். அந்த மாதிரி சூழ்நிலையில் நான் மக்கள் பணியாற்றுவதில் கொஞ்சம் சிரமம். அதனால் தான் சினிமா படங்களை கூட தவிர்த்து வருகிறேன். வருடத்திற்கு 10 படங்களில் நடிக்க கேட்கிறார்கள். ஆனால், என்னால் நடிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு படத்தில் மட்டும் தான் ஒப்புக்கொள்ள முடிகிறது. காரணம் சினிமாவை விட்டு விலகிட கூடாது என்பதற்காக தான் வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று பல விஷயங்களை நெப்போலியன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Advertisement