சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்களும் சரி கதாநாயகிகளும் சரி எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருவார்கள். கோடி கணக்கில் பணம் சம்பாதிப்பதனால் அவர்கள் எப்போதும் வசதியான வாழைக்கை முறையை தான் கொண்டிருப்பார்கள். ஆனால் நடிகர் விமல் அதிலிருந்து ஸ்டாரு வித்தியாசமானவர் போல.
தமிழில் சினிமாவில் நடிக்க வரும் முன்பு கூத்து பட்டறையில் இருந்து வந்தார் நடிகர் விமல். அதன் பின்னர் பல்வேறு சினிமாக்களில் ஒரு நிமிடம் மட்டும் வந்து செல்லும் துணை நடிகராக நடித்து வந்தார். பின்னர் பியக்குனர் பாண்டிய ராஜன் அவர் இயக்கிய “பசங்க” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.
அதன் பின்னர் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “களவாணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் தமிழில் “துங்கா நகரம், வாகை பூ சூடவா, கலகலப்பு ” போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது களவாணி 2 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அந்த படப்பிடிப்பு தலத்தில் நடிகர் விமல் உணவு உண்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பிரபல ஆர். ஜே , விக்னேஷுடன் அமர்ந்து கொண்டு ஊரு தட்டில் பழைய சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் . தற்போது அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் விமலின் எளிமையை கண்டு பாராட்டி வருகின்றனர்.