இந்தி நடிகை யாமி கௌதம், வட இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்த இந்தி நடிகை, தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “கௌரவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது தங்கை ஒருவர் அணிந்து சென்ற ஆடையால் ஒரு உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகையான யாமி கௌதம் , என்.டி டிவி, கலர்ஸ் போன்ற இந்தி சேனல்களில் ஒளிப்பிப்பார்ப்பான பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் 29 வயதாகும் இந்த இளம் நடிகை கன்னடத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான “உல்லாச உட்சஹா ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகை யாமி கௌதமிற்கு, சூரிலி கௌதம் என்ற ஒரு தங்கையும் இருக்கிறார். மாடல் அழகியான இவரும் ஒரு நடிகை தான். கடந்த 2008 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடித்துள்ளார். மேலும் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘பவர் கட் ‘ என்ற பஞ்சாபி மொழி படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் யாமி கௌதம் மற்றும் சூரிலி கௌதம் இருவரும் செர்பியா நாட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அப்போது சூரிலி கௌதம் ஒரு குட்டையான ஆடையை அணிந்திருந்ததால் அவரை உணவகத்தில் இருந்து வெளிய செல்லும்படி உணவாக நிர்வாகம் கூறியுள்ளது கூறியுள்ளது. இந்த சம்பவத்தை நடிகை யாமி கௌதம் தனது செல் போன் மூலம் வீடியோ எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.