பிக் பாஸ்’ வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும்,பரணியும் கலந்த கலவையாக, பிக் பாஸ் வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்’ வீட்டில் முதல் நாள் இருந்த சென்றாயனுக்கும், இப்போதிருக்கும் சென்றாயனுக்கும் நிறைய வித்தியாசங்கள். முதலில், அனைவரிடமும் சகஜமாகப் பழகிக்கொண்டிருந்தவர், இப்போது ஒவ்வொருவரின் சுயத்தையும் தெரிந்துகொண்டு உஷாராகப் பேசுகிறார்.
இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி தனது சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்களை தனக்கு நெருக்கமான போட்டியாளர்களுடன் பகிர்ந்து வருகிறார் சென்ராயன். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் தனது மாணவி கயல்விழி குறித்து சென்ராயன் பேசியபோது, ‘தனது மனைவியை நான் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.மேலும்,முதன் முதலில் அவரை(கயல்விழி) திருப்பூரில் தான் சந்தித்துள்ளார்.
முதல் முறையாக தனது காதலி கயல்விழியை ஹோட்டலுக்கு கூட்டி செல்லும் போது கையில் காசு இல்லாததால் தனது நண்பரிடம் தான் பணம் வாங்கி சென்றுள்ளார்.பின்னர் ஒரு முறை கயல்விழியை ஒரு ஆடை கடைக்கு அழைத்து சென்று பெண்கள் அணியும் உள்ளாடைகளை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், கயல்விழியின் தோழிகள் சென்றாயனை பற்றி தவறாக கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாடகை வீட்டில் திருமணமானவர்களுக்கு தான் வீடு கிடைக்கும் என்பதால், கயல்விழிக்கு போலியான தாலியை கட்டியுள்ளார் சென்ராயன்.பின்னர் ஒரு மூன்று மாதங்கள் வாடகை வீட்டில் ‘லிவிங் டு கேதர்’ என்ற வாழக்கை முறையில் ஒன்றாக வாழ்ந்துள்ளார்(உண்மையில் அதற்க்கு அர்த்தம் சென்றாயனுக்கு தெரியுமா,இல்லையா என்று கூட தெரியாது). அதன் பின்னர் இரு வீட்டாரிடமும் தங்களுது காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் நெருங்கியும் இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்காமல் இருந்தது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் பேசிய நடிகர் சென்ட்ராயன் , தனக்கு குழந்தை இல்லை என்றும் அதனால் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்க போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் அப்படி கூறிய சில நாளிலே அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.