அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் முக்கிய திருப்பம். விசாரணை அதிகாரி மாற்றம். காரணம் என்ன ?

0
1291
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நாகஜோதி இருந்து வந்துள்ளார். தற்போது அவரை செந்தில் பாலாஜி வழக்கில் இவர் தான் விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது இவரை பணியிட மாற்றம் செய்துள்ளதால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் அமைச்சரின் வழக்கை 2 ஆண்டுக்களாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார்.   

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

- Advertisement -

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

இரவு 8 மணியளவில் புழல் சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.

குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகை மற்றும் 2700 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பக்கமும் காவலர்களுடன் நீதிமன்றம் வந்தடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. அனைத்து ஆவணங்களும் இரும்பு பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை.

-விளம்பரம்-

அதிகாரி பணியிட மாற்றம்:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை 2 ஆண்டுகளாக பார்த்து வந்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நாகஜோதி தற்போது ஆவணக்காப்பக எஸ்.பி யாக மாற்றி அரசனை வெளிவந்துள்ளது. அவருக்கு பதில் புதிய துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்க்கான காரணம் நாகஜோதி அமைச்சரின் வழக்கில் சமரசம் செய்து கொள்ளதது தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.    

Advertisement