கருணாஸின் ஆதார் படம் எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ.

0
780
aadhar
- Advertisement -

இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆதார். இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, திலீப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் ஆதார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கட்டிட தொழிலாளியாக பச்சை முத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார். அவருடைய மனைவியாக துளசி என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. இன்னொரு பக்கம் இவர்கள் இருவருக்கும் துணையாக சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த இனியா இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இனியா காணாமல் போகிறார். பின் அவருடைய சடலம் தான் மருத்துவமனைக்கு வெளியில் கிடக்கிறது.

- Advertisement -

படத்தின் கதை:

இதேபோல் பச்சை முத்துவின் மனைவியையும் காணாமல் போகிறார். இதை அடுத்து பச்சை முத்து போலீசில் புகார் கொடுக்கிறார். அப்போது விசாரிக்கும் போது ஒரு அதிர்ச்சியான தகவல் பச்சைமுத்துக்கு கிடைக்கிறது. ஆனால், பச்சை முத்து அதை ஏற்க மறுகிறார். பின் மச்சைமுத்து தன்னுடைய மனைவி எங்கே என்று தேடுகிறார். இறுதியில் பச்சைமுத்துவின் மனைவி என்ன ஆனார்? பச்சைமுத்துவிற்கு வந்த தகவல் என்ன? இனியாவின் கொலைக்கு காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

பணத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி இருக்கிறது என்பதை படத்தில் அழகாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் தந்திரத்தால் சாதாரண மனிதர்களின் உயிர்கள் எப்போதும் அலட்சியமாக விளையாட்டு கருவியாக தான் இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார். கிரைம், தில்லர் கதையை இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் மக்களுக்கும் புரியும் வகையில் இயக்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. படத்தில் கட்டிட தொழிலாளியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கருணாஸ் வெளிப்படுத்தி இருக்கிறார். கிழிந்த பனியன், அழுக்கு லுங்கி என்று அவருக்கே உரிய பரிதாபத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மனைவி, குழந்தையை நினைத்து கருணாஸ் அழுந்து தள்ளும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை கருணாஸ் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.

இவரை அடுத்து ரித்விகா தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிகாரத்தை எப்படி எல்லாம் வலைக்கலாம் என்ற கதாபாத்திரத்தில் உமா ரியாஸ், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தில் உள்ள பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படம் மெதுவாக தான் செல்கிறது. படத்தில் சஸ்பென்ஸ்கள் வைத்திருந்தாலும் அதை மக்களுக்கு புரியும் படியும் தெளிவாகவும் காண்பித்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ஆதார் படம் சுமாரான படம் என்று சொல்லலாம்.

பிளஸ்:

கருணாஸின் நடிப்பு சூப்பர்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

சாதாரண மக்களின் உரிமையை குறித்த கதை.

மைனஸ்:

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மெதுவாக செல்கிறது.

படத்தின் சஸ்பென்சை இன்னும் கொஞ்சம் தெளிவாக காண்பித்திருக்கலாம்.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.

மொத்தத்தில் ஆதார்- பெரிய அளவில் அடையாளப்படுத்தவில்லை.

Advertisement