‘ஹரிபத்மன் பத்தி இப்படி பேச சொன்னாங்க’ கலாச்சாரத்தின் மையமாக இருக்கும் கலாஷேத்ரா பத்தி பேசறது அம்மாவ பேசற மாதிரி – கொந்தளித்த அபிராமி.

0
658
Abhirami
- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் அபிராமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது. இந்த நிலையில் இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்திருக்கின்றது.

-விளம்பரம்-

இதனால் கலாஷேத்ரா அறக்கட்டையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர்.பின் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

- Advertisement -

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் அபிராமி. இதுகுறித்து பேசிய அவர் “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன்.

-விளம்பரம்-

கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். “ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர். நான் இருந்த வரை எனக்கு எந்த தொந்தரவும் நிகழ்ந்தது இல்லை. கலாஷேத்ரா கலாச்சாரத்தின் அடையாளம், அதற்கு கெட்டப்பெயர் வரும் போது என் அம்மாவை பேசுவது போல இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நான் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று சங்கி என்றெல்லாம் சொல்கின்றனர் என்று கூறி உள்ளார்.

Advertisement