சாக்க்ஷி பின்னாடியே போறான் பொருக்கி நாயி.! கவினை திட்டும் அபிராமி.! டெலீட் செய்யபட்ட வீடியோ.!

0
55595
Kavin
- Advertisement -

பிக் பாஸ் வீட்டினுள் கவின் தான் தற்போது ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் மீது காதல் கொண்டிருப்பதை கவினிடம் நேரடியாகவே கூறி இருந்தார் அபிராமி. ஆனால், கவினோ நாம் இருவரும் நண்பர்களாக பழகி கொள்ளலாம் என்று கூறிவிட்டார். அதேபோல அபிராமியிடம் மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சாக்ஷி, ஷெரின், லாஸ்லியா ஆகிய அனைவரிடமும் கவின் ஜொள்ளு விட்டுக் கொண்டுதான் வருகிறார். அது நிகழ்ச்சி பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிகிறது.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில நாட்களாகவே கவின் சாட்சியிடம் தான் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாக்க்ஷி தனியாக அழுது கொண்டிருந்த போதும் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். அதேபோல சாக்க்ஷி நாமினேஷனில் இடம்பெற்ற போதும் அவருக்கு ஆறுதல் கூறி இருந்தார். கவின், சாட்சியிடம் நெருக்கமாக இருப்பதை கண்டு தற்போது அபிராமி உண்டாக்கியுள்ளார்.

- Advertisement -

நேற்று மீரா மிதுன் குறித்து ஷெரின், வனிதா, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் கூடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஷெரின், கவின் எப்போதும் சாக்க்ஷி பின்னாடியே போயிடு இருக்கான் என்று கூற, கடுப்பான சாக்க்ஷி ‘வால் மாதிரியே பின்னாடியே போறான் பொறுக்கி நாய்’ என்று டென்ஷனாகி திட்டி விடுகிறார்.

கவின் பின்னால் முதலில் அபிராமி தான் ஜொள்ளு விட்டுக்கொண்டு திரிந்து கொண்டிருந்தார். அதற்கு பின்னர் இவர்கள் இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் குறைந்து விட்டது. அதன் பின்னர் சில நாட்களாகவே கவின் சாக்க்ஷியிடம் தான் நெருக்கமாக இருந்து வருகிறார் கவின்.

-விளம்பரம்-
Advertisement