தமிழ் புத்தாண்டில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய அம்மன் சீரியல் பிரபலம். என்ன வேண்டியுள்ளார் பாருங்க.

0
403
Amman
- Advertisement -

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய சீரியல் நடிகர் அழகப்பனின் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேடிங்க்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்புகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சீரியல்கள் மட்டுமில்லாமல் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அழகப்பன். பின் இவர் சீரியல்களில் காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கனா காணும் காலங்கள் சீரியலில் காலேஜ் பேட்ஜில் காமெடி நடிகராக நடித்தார். அதன்பின் சின்னதம்பி சீரியலில் நடித்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, செம்பருத்தி ஆகிய தொடர்களில் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகராக மாறினார்.

- Advertisement -

அழகப்பனின் சின்னத்திரை பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் கலர்ஸ் டிவியில் ‘பட்டாசு பாய்ஸ், மத்தாப்பு கேர்ள்ஸ், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கலாட்டா பொங்கல் ஆகிய பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழகப்பன் பங்கேற்று இருந்தார். பின் தெருக்கூத்து கலைஞராக இவர் செய்த பர்பாமன்ஸ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது. அதேபோல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரோமியோ ஜூலியட் என்ற நிகழ்ச்சியிலும் அவருடைய மனைவியுடன் பங்கேற்று அசத்தி இருந்தார்.

அழகப்பன் நடிக்கும் சீரியல்கள்:

இப்படி தொகுப்பாளர், நடிகர் என இரண்டையுமே சின்னத்திரையில் செய்வது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. இருந்தும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் அழகப்பன். தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அம்மன் 3, உடன்பிறப்பே போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சினிமாவைப் போல் அல்லாமல் சீரியலிலும் காமெடி நடிகர்களான தேவை மிகக் குறைவு.

-விளம்பரம்-

தமிழ் புத்தாண்டு வாழ்த்து:

இருந்தும் தன்னுடைய திறமையால் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் சீரியல்களில் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் செம்ம ஆக்டிவாக இருப்பார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகப்பன் பதிவிட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தமிழ் புத்தாண்டான சித்திரை 1ஆம் தேதி முன்னிட்டு அழகப்பன் அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துச் செய்தியுடன் பகிர்ந்து உள்ளார்.

அழகப்பன் பதிவிட்ட புகைப்படம்:

சோசியல் மீடியாவில் நடிகர், நடிகைகள் புது புது கெட்டப்பில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி வாழ்த்து போடுவார்கள். ஆனால், எதார்த்தமாக கிராமத்து ரோலில் நடித்து வரும் அழகப்பன் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். தலையில் பால் கொடுத்துடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், எல்லா வளமும் நலமும் பெற்று நாம் அனைவரும் சிறப்புற வாழ்வோம் என கமெண்ட்டுகளை போட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் வாழ்த்துக்கூறி, லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement