பொன்வண்ணனை தொடர்ந்து சித்தி 2 வில் இணைந்த பிரபல இயக்குனர். சின்னத்திரையில் முதன் முறை. வீடியோ இதோ.

0
40870
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.

-விளம்பரம்-

இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ஆனால் ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான்.

இதையும் பாருங்க : கன்னங்கள் சுருங்கும் அளவிற்கு ஸ்லிம் தோற்றத்தில் மாறியுள்ள நிக்கி கல்ராணி. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

தற்போது “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளனர். சித்தியின் இரண்டாவது பாகம் வருகிற 27-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் பிரபல இயக்குனரான பாக்கியராஜும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.

-விளம்பரம்-

இதனால் இந்த தொடரில் நடிகர் பாக்கியராஜும் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. நடிகர் பாக்யராஜ் இயக்கிய பல்வேறு படங்களில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை சித்தி 2 வில் பாக்யராஜ் எதாவது கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேலை பாக்கியராஜ் இந்த தொடரில் நடித்தால் அது பாக்கியராஜின் முதல் தொலைக்காட்சி தொடராக இருக்கும். மேலும் இந்த தொடரில் ஏற்கனவே பொன்வண்ணன் இருக்கிறார் என்பதும் உறுதியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement