தமிழில் சூது கவ்வும், தெகிடி, வில்லா போன்ற பங்களில் நடித்த அசோக் செல்வன் பிரபல பின்னனி பாடகி ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
நடிகர் அசோக் செல்வன், தமிழில் பரதேசி, ரம் , வணக்கம் சென்னை போன்ற படங்களில் பின்னனி படிகியான பிரகதி குருப்ரசாத் என்பவரை காதலித்து வருவதாக சில காலங்களாக தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் எடுத்துக்கு கொண்ட புகைப்படம் ஒன்று வெளியகி, நிஜமாகவே இவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா என்று ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பின்னனி பாடகியான பிரகதி சிங்கப்பூரில் பிறந்தவர். இவர் ஒரு சமயம் இந்தியாவிற்கு வந்த போது 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த “ஏர்டெல் சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயங்கிய “பரதேசி ” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தற்போது 24 வயதாகும் பிரகதி, சில நாட்களாக நடிகர் அசோக் செல்வனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் வந்த நிலையிலும், இவர்களது இருவரின் தரப்பிலும் இதுபற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.