ஊர்ல இருந்து வந்தா என்னை தான் முதலில் பார்ப்பான், ஆனால் , பேரன் முகத்தைகூட பார்க்க முடியவில்லை – சாருஹாசன் கவலை

0
52482
charuhaasan
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சாருஹாசன். நடிகர் சாருஹாசன் அவர்கள் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த சகோதரர் ஆவார். இவர் திரைப்பட நடிகர், இயக்குனர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை காண்பித்தவர். தமிழ் சினிமா உலகில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சுகாசினியின் தந்தை ஆவார்.

-விளம்பரம்-
Suhasini Height, Weight, Age, Boyfriend, Children, Family ...

- Advertisement -

நடிகை சுகாசினி அவர்கள் 80,90 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : பிங்க் படத்தில் கழுத்தில் குத்திய டாட்டுவை நிஜத்தில் குத்த ஆசை – ஆனால், டாப்ஸீ சொன்ன சீக்ரெட்.

நடிகை சுகாசினி அவர்கள் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் மணிரத்தனத்தை திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் மணிரத்தினம்–சுகாசினியின் மகன் தான் நந்தன். இவர் சமீபத்தில் தான் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தார். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Suhasini Mani Ratnam talks to son Nandan, in quarantine, across a ...

ஆகையால் சுகாசினி மகன் நந்தன் வீட்டுக்குளேயே 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இன்றுடன் அவர் தனிமைப் படுத்திக் கொண்டு 11 நாட்கள் ஆகின்றன. தனிமையில் இருக்கும் மகனுடன் சுகாசினி பேசும் வீடியோ பதிவெல்லாம் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் சாருஹாசன் அவர்கள் தனது பேரன் தனிமை கொண்டதை குறித்து அவர் கூறியது, என் பேரன் நந்தன் லண்டனில் இருந்து வந்த உடன் தாத்தா என்று என்னை தான் பார்க்க வருவான். இப்போது அவன் வந்து 10 நாட்களாகியும் அவன் முகத்தை கூட பார்க்க முடியவில்லை.

View this post on Instagram

Day 5 after his return from london

A post shared by Suhasini Hasan (@suhasinihasan) on

எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், என்ன செய்வது கொரோனாவை விரட்டி அடிக்க இது தான் வழி என்று கூறியிருந்தார். தற்போது சாருஹாசன் பேசி உள்ள வீடியோவும், நந்தன் தனிமைப் படுத்திக் கொண்ட வீடியோ பதிவையும் இணைத்து தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு வீடியோவாக நடிகை சுகாசினி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலர் பாராட்டியும் உள்ளார்கள்.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசினால் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 2095 பேர் பாதிக்கப்பட்டும், 57 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்து உள்ளார். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார் .

Advertisement