தனது 63 வயதில் திடீர் அரசியல் பிரவேசம் செய்துள்ள கமல்ஹாசனின் இன்னொரு பக்கம் வெளிவர துவங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு ஜாம்பவான் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்கினார் கமல்.
அப்துல்கலாமின் இறப்பிற்கு வராத நடிகர் கமல்ஹாசன் அவரது வீட்டில் இருந்து அரசியல் பிரவேசம் செய்து லாபம் பார்க்கிறார் என விமர்சனங்கள் வந்தது. மேலும், அப்துல்கலாமின் இறுதி ஊர்வலத்திற்கு வராத நீங்கள் அரசியல் ஆரம்பத்தை அவரை வைத்து செய்கிறீர்கள் என கேள்வியும் கேட்க்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘நான் இறுதி ஊர்வலங்களில் கலந்துகொள்வதில்லை’ என பதில் கூறினார்.
ஆனால், இதற்கு முன்னர் சிவாஜி, ஜெமினி கணேசன், வாலி உள்ளிட்ட நடிகர்களின் இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டுள்ளார் கமல். இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பை வருகிறது. மேலும், ரசிகர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மும்பையில் அவரது உடல் வைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் இறுதி அஞ்சலியை கலந்துகொல்வதில்லை எனக் கூராய கமல்ஹாசன் தற்போது நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த இன்று மும்பை சரளா உள்ளார். இப்படி இரட்டை நாக்கை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளார் கமல்ஹாசன். இதனை மக்கள் எவ்வாறு கண்டுகொள்ள போகிறார்கள் என்பதுதான் இனிவரும் கதை. இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.