டிசைன் டிசைனாக பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான், தேர்தலில் இருந்து விலகுவதாக திடீர் முடிவு. காரணம் இது தானாம். (நாய் கிட்ட எல்லாம் குறை கேட்டாரே)

0
1217
mansoor
- Advertisement -

வருகிற சட்ட மன்ற தேர்தலில் சுயேட்ச்சி வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென்று வாபஸ் வாங்கி உள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இப்படி ஒரு நிலையில்  தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், திடீரென்று தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி சரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் – இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் .

- Advertisement -

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மன்சூர் அலிகான், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட உக்கடம் லாரி பேட்டை பின்பிறமுள்ள மீன் மார்க்கெட்டில் ஆதரவு திரட்டினார். அப்போது, மீன் வியாபாரத்தில் இறங்கிய அவர் மீனை வெட்டி கிலோ 100 ரூபாய் என்று விற்பனை செய்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று (மார்ச் 21) காலை வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், மாலையில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “நான் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடுவதாக பலரும் பேசுகின்றனர். தேர்தலில் போட்டியிட்டு, மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதில், போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளேன். எனவே, வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன். இந்த முடிவு மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement