நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரு சில ஆண்டுகளிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். ஆனால் ஒரு சில ஜோடிகள் காதலிக்கும் போதே பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.ஆனால் போஜ்பூரி சினிமா துறையில் இருக்கும் ஒரு பிரபலமான காதல் ஜோடிகள் குடிபோதையில் அடிதடி வரை சென்றுள்ளனர்
போஜ்புரி சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர் பவண் சிங் என்பவர் அக்ஷரா சிங் என்ற நடிகையுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.ஏற்கனவே ஜோதி சிங் என்பருடன் திருமணமான பவன் சிங் சமீபத்தில் மும்பையில் உள்ள சில்வாச என்ற பகுதியில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு இருவரும் டாமன் கங்கா வேலி என்ற விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு பவண் சிங் குடித்துவிட்டு ரூமை விட்டு வெளியே கிளம்பியுள்ளார். அப்போது அவரை வெளியில் செல்ல வேண்டாம் என்று தடுத்த அக்ஷரா சிங்கின் முடியை பிடித்து இழுத்து அவரின் தலையை ஒரு சுவற்றில் இடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியக்டைந்த ரிசார்ட் பணியாளர்கள் அவரை தடுக்கச்சொன்னர் அப்போது அவர்களிடமும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார் பவன் சிங். இந்த சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் ஷாகித் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.