இரண்டாம் திருமணத்திற்கு பின் ஆளே மாறியுள்ள பிரபுதேவா – லேட்டஸ்ட் புகைப்படம்.

0
5139
prabhudevawife
- Advertisement -

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். .பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா ,ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவா நடிகை நயன்தாராவின் காதல் மலர்ந்தது. பிரபுதேவா, நயன்தாராவுடனான பிரச்சனையால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பின்னர் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவின் முதல் மனைவி பேசுகையில் நயன்தாராவை எந்த ஒரு நிகழ்ச்சியில் பார்க்க நேர்ந்தாலும், அவளை சந்திக்க நேர்ந்தாலும் அப்படியே ஓங்கி ஒன்னு பலார்ன்னு கன்னத்தில் அரையலாம் என்று தோன்றுகிறது என்று கோபத்துடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையும் பாருங்க : ‘தளபதி 65’ பூஜைக்கு வராததர்க்கான காரணத்தை சொன்ன பூஜா ஹேக்டே – கழுவி ஊற்றிய தளபதி ரசிகர்கள்.

- Advertisement -

ஆனால் நடிகர் பிரபு தேவாவிற்கு கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் முடிந்துவிட்டது என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியானது.கடந்த சில காலமாக பிரபுதேவா முதுகுவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அந்த முதுகுவலி பிரச்சினையை சரி செய்வதற்காக பிசியோதெரபிஸ்ட் ஒருவரிடம் பிரபுதேவா சிகிச்சை பெற்று வந்தாராம். அவருக்கு சிகிச்சை பார்த்தது ஒரு பெண் மருத்துவர் தானம். முதுகு வலிக்காக அந்த பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்த பிரபுதேவாவிற்கு காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது.

எப்படியோ இத்திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து ஆங்கில நாளிதழ் ஒன்று பிரபுதேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரத்தை தொடர்பு கொண்டு திருமணம் குறித்து விசாரிக்க, அவரும் இந்த கல்யாணம் நடந்தது உண்மை தான். இந்த சுப காரியத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்று செய்திகள் வெளியானது. இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரபுதேவாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை சார்மி வெளியிட்டுள்ளார். அதில் மொட்டை தலையோடு வயதான தோற்றத்தில் சற்று வித்யாசமாக இருக்கிறார் பிரபு தேவா.

-விளம்பரம்-
Advertisement