இந்த இனத்தவர் தான் சினிமாவில் அதிகம்.! சர்ச்சையை ஏற்படுத்திய ராதாரவியின் பேச்சு.!

0
3535
radharavi
- Advertisement -

சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராதாரவி. இவர் திரைப்பட நடிகராகவும், அதிமுக அரசியல்வாதியும் ஆவார்.இவர் சினிமா திரை உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவருடைய நடிப்பினால் இவர் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்று உள்ளார். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். இவர் சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகி இருந்தார். ஆனால், 2010 ஆம் ஆண்டில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். இவர் சினிமா துறையில் பிரபல நடிகரான எம் .ஆர். ராதா அவர்களின் மகன் ஆவார்.

-விளம்பரம்-
Image result for radharavi

நடிகர் ராதாரவி அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மக்கள் அனைவரும் கொந்தளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் கூறியது, தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இனத்தவர் மக்கள்தான் அதிகம் இருக்கின்றனர் எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலுள்ள அரசியலிலும் அவர்கள் தான் அதிகம் உள்ளனர் என கூறினார். சினிமா துறையிலும், அரசியலிலும் தெலுங்கு மக்கள் தான் உள்ளனர். மேலும், தமிழ்நாட்டு அரசியலில் தெலுங்கு மக்கள் ஆதரவு இருந்தால் மட்டும் தான் ஆட்சியில் உட்கார முடியும் என கூறிய வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் அவர் தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளில் தெலுங்கர் இனத்தவர் தான் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

- Advertisement -

மேலும், சினிமா துறையிலும் தமிழ் மக்களை விட தெலுங்கு மக்கள் தான் அதிகம் உள்ளனர் எனவும் கூறியுள்ளார். வேறு எந்த இனத்தவர் அதிகமாக இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்க? எனவும் கேட்டார். இதனை தொடர்ந்து அவர் நானும் ஒரு ‘தெலுங்கு’ காரன் தான் என்று கூறினார். மேலும், அவர் இளைஞர்களுக்கு ஒரு கருத்தையும் சொன்னார். அது “நான் தெலுங்கன் என்று பெருமையோடு இருங்கள்” இளைஞர்களே என்று அவருடைய இனத்தவர் மக்களை மட்டும் பெருமைப்படுத்தும் வகையில் ராதாரவி கூறியுள்ளார்.மேலும் தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் வேட்பாளர்களே இல்லை, சினிமாத்துறையில் நடிக்கவும் ஆள் இல்லை என்று உணர்ச்சிவசப்படும் வகையில் அவர் வார்த்தைகளை கொட்டி விட்டார்.

இது எந்த அளவுக்கு தமிழகத்தில் பூகம்பமாக வெடிக்கப் போவது என்று தெரியவில்லை.” வந்தாரை வாழ வைப்பது தமிழ்நாடு” என்ற பழமொழிக்கேற்ப தமிழ்நாட்டில் தமிழ் இனத்தவர்கள் மட்டும் கிடையாது , அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய இனத்தவர் மக்களும் உள்ளனர். அதனால அரசியலில் வேண்டுமென்றால் பாலிடிக்ஸ் பண்ணுங்க ஒற்றுமையாக இருக்கும் தமிழ்நாட்டில் பண்ணாதீங்க என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாடு- கர்நாடகா பிரச்சனை இப்ப தான் ஓய்ந்தது. நடிகர் ராதாரவி மூலமாக தமிழ்நாடு– ஆந்திரா பிரச்சனை நடக்கும் போல இருக்கு எனவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.உங்கள் இனத்தையும் வாழ வைத்தது தமிழ் தான் என்று நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள் என ஆவேசத்துடன் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் கூறுகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement