தமிழில் சூது கவ்வும் படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ரமேஷ் திலகிற்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரமேஷ். இவர் சூது கவ்வும் படத்திற்கு முன்பாகவே மாப்பிளை, மங்காத்தா, மரீனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ சூது கவ்வும் படத்தின் மூலம் தான்.
சூது கவ்வும் படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார்.பெரும்பாலும் இவர் விஜய் சேதுபதி படங்களில் இடம்பெற்று விடுவார். அதே போல கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக தூள் கிளப்பியவர் நடிகர் ரமேஷ் திலக்.
இதையும் பாருங்க : விருதை திருப்பி கொடுத்த பாலா – போட்டியாளர்கள் பற்றி புதிய சர்ச்சையை கிளப்பிய அனிதா (யார சொல்றாரு)
மேலும், ரஜினி, விஜய், அஜித் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் இவர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார். இவர் முதலில் சூரியன் எம்.எம்மில் ஆர்.ஜேவாக இருந்து பின்னர் நடிக்க வந்தவர் ஆவார். இவருக்கும் ஆர்.ஜே நவலட்சுமி என்பவருக்கும் கடந்த 2018 ஆம், ஆண்டு மார்ச் மாதம் திருமண நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர் திருமணம் செய்து கொண்ட நவலக்ஷ்மி, சூரியன் எஃப்.எம்மில் இவர் பணியாற்றிய போது காதலித்தது வந்தவர் தான்.ஆர்.ஜேயிங்ல இவங்களைவிட நாலு வருஷம் ஆஃபீஸ்ல சீனியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரமேஷ் – நவலக்ஷ்மி தம்பதியருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகனுக்கு ‘மாயன்ராணா’ என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.