தேசிய அளவில் தங்கம் வென்ற பிரபல நடிகரின் மகன். இவரது தாத்தாவும் குசும்பமான நடிகர் தான்.

0
20083
sibiraj-son
- Advertisement -

கோவை மாவட்டத்தில் பிறந்து ,எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சத்யராஜ். இவர் முதலில் சினிமா திரை உலகில் வில்லனாகத் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் நடிகர் சத்தியராஜ் அவர்கள் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். அதிலும்,’கடலோர கவிதைகள்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் சிறந்த நடிகர் என்று சொல்லப்படும் அளவிற்கு பெயர் எடுத்து தந்தது. அதற்கு பின் ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படங்களின் மூலம் இயக்குனர் ஆனார். மேலும்,’லீ’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படி சினிமா திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறேயே, என்னம்மா கண்ணு, தகடு தகடு ,கடப்பா’என்ற ஒரு சில வார்த்தைகள் சொன்னாலே போதும் அவர் யார் என அனைவருக்கும் தெரிந்து விடும்.

-விளம்பரம்-

அந்த அளவுக்கு ரசிகர் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் நடிகர் சத்யராஜ். இப்படி சத்யராஜ் அவர்கள் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக உள்ளார். இவர் மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளார்கள். நடிகர் சிபிராஜூம் தமிழ் திரைப்பட நடிகர் தான். இவரை லீ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதோடு இவர் தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் மாஸ் காட்டி உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து நடிகர் சிபிராஜ் அவர்கள் கட்டப்பாவ காணோம் என்ற படத்தில் நடித்து உள்ளார். ஆனால்,இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை.

இதையும் பாருங்க : கமலுக்கு பொது மேடையிலேயே முத்தம் கொடுத்த நடிகை. இவங்களுக்கு அந்த உரிமை இருக்கு தான்.

- Advertisement -

மேலும், தற்போது நடிகர் சிபிராஜ் அவர்கள் ‘கபடதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் நந்திதா,பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சைமன் கிங் இசை அமைக்கிறார்கள். மேலும்,ராசாமதி அவர்கள் ஒளிப்பதிவும் செய்கிறார். இப்படத்தை கிரேட்டிவ் என்டர்டைனர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த நிலையில் சிபிராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகன் குறித்து பதிவிட்டு உள்ளார். அது என்னவென்றால் நடிகர் சத்தியராஜ் பேரனும், சிபிராஜ் மகனும் ஆனவர் தீரன். தீரன் கடந்த 9 ,10ம் தேதிகளில் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.

Image result for sibiraj son"

டேக்வோண்டா என்பது கொரியா நாட்டின் தற்காப்புக் கலை ஆகும். மேலும்,அங்கு நடந்த போட்டிகளில் வென்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார். மேலும், நடிகர் சிபிராஜ் அவர்கள் தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையாகவும் உள்ளது எனவும் அவர் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். மேலும், இது குறித்து பல பிரபலங்களும்,நெட்டிசன்களும் நடிகர் சிபிராஜுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அப்படியே சிபிராஜ் போல உள்ளது எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement