தமிழகத்தில் தற்போது ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து சமீபத்தில் போராட்டம் ஒன்றை நடத்தினர். ஓரின சேர்க்கையாளர்கள் உரிமையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தபட்டது. இந்நிலையில் பிரபல திருநங்கை அப்சாரா ரெட்டி ஓரினசேர்க்கையாளர்கள் உரிமைக்கு ஆதரவு கொடுத்ததற்காக நடிகர் சிம்புவை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைய நடிகர்களில் கொடி கட்டி வந்தவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, நடனம் என்று பல்வேறு திறமைகளை வைத்திருக்கிறார். சில காலமாக பல பிரேச்சனைகளால் பல வருடங்களாக சினிமா துறையில் பட வாய்ப்புகள் எதுவுமின்றி அனைவராலும் கைவிடபட்டர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் சினிமாவில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்தார்.ஆனால் அதற்கு பிறகு AAA என்ற படத்தின் மூலம் மீண்டும் தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்டார்.
It’s always refreshing speaking to Tesingu Rajendar Silambarasan. Such open mindedness, respect and humour. And so touched at his openness to work with LGBT community and support the Trans rights movement. #SomethingExciting #ComingSoon.
Hariharan Naidu
— Apsara R (@ApsaraReddy) June 25, 2018
சமீபத்தில் சிம்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்சரா ரெட்டி” சிம்பு உடன் பேசுவது எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு விடயம் தான், அவர் ஒரு வெளியப்படையாக பேசும் மரியாதைக்குரிய மனிதர். ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் நலனுக்காக தொடங்கபட்ட lgbt அமைப்பில் (The Lesbian, Gay, Bisexual & Transgender Community Center) அவர் இணைத்துள்ளது நெஞ்சை தொடும் உணர்ச்சியாக இருக்கிறது. ‘I என்று பதிவிட்டுள்ளார்.