கௌண்டமணியுடன் சூரி நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா. இது தான் சூரி பேசிய முதல் வசனமாம்.

0
38071
goundamani-soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடியன்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்வளவு ஏன் வைகைபுயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கௌண்டமணியின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி.

இதையும் பாருங்க : அட்லீயின் பேவரைட் அஜித் படங்கள் இது தானாம். ரசிகர் கேள்விக்கு அட்லீ ட்வீட்.

- Advertisement -

ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை. ஆனால், நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக பட குழுவினர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றனர். அப்போது சூரி செய்த காமெடிகள் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருமே சூரிக்கு இயக்குனர்கள் சொல்லித்தரும் காமெடியை விட அவராக செய்யும் காமெடி நன்றாகவே இருக்கிறது என்று கூறி வந்தனர். அந்த அளவிற்கு நிஜ வாழ்விலும் மிகவும் நகைச்சுவை நிறைந்த ஒரு நபராக இருந்து வருகிறார் சூரி.

soori

நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. மேலும், சினிமாவில் வருவதற்கு முன்பாக திருமதி செல்வம், புஷ்பாஞ்சலி, மைதிலி, ஜென்மம் எக்ஸ் போன்ற பல சீரியல்களில் கூட நடித்துள்ளார் சூரி. ஆனால், சூரி கௌண்டமணி படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.

-விளம்பரம்-

ஆம் , நடிகர் சூரி 20 வருடங்களுக்கு முன் சூரி, காமெடி கிங் கௌண்டமணி படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி, மந்த்ரா, செந்தில் கௌண்டமணி போன்ற பலர் நடித்த ‘கண்ணன்’ வருவான் என்ற படத்தில் தான் நடிகர் சூரி ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். அந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, 20 வருடங்களுக்கு முன்னர், சினிமாவில் நான் பேசிய முதல் வசனம். நன்றி கவுண்டமணி சார் நன்றி சுந்தர்.சி அண்ணன். படம் “கண்ணன் வருவான்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சூரிக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகளும் இல்லை. தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் சங்கத்தமிழன் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

Advertisement