அதுபோக திறைத்துரையை சேர்ந்த பல்வேறு கலைஞ்சர்களும் தங்களால் முடிந்த நிதியுதவியும் பொருளுதவியையும் செய்து வரும் நிலையில் விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என பலரும் உதவி செய்தனர்.
பல்வேறு நடிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளித்து வரும் நிலையில் காமடி நடிகர் சூரியும் நிதியுதவியிம் பொருளுதவியும் அளித்துள்ளார். அதுபோக புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள செருவாவிடுதி பகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
செருவாவிடுதியில் சூரியை பார்த்த மூதாட்டி ஒருவர், உன்னைய பார்த்து இத்தனை நாள் சிரிச்சோம். இப்போ உன்னைய பார்த்து அழுவுறோம். நாங்க நிலை குலைஞ்சு கிடக்குறப்ப நேர்ல வந்து நிற்கிற பாரு... இனி உன்னை சினிமாவுல பார்க்கிறப்ப எல்லாம் நடிகன்னு சொல்ல மாட்டேன். எம்புள்ளன்னு சொல்லுவேன் என்று கட்டிபிடித்து அழுதுள்ளார்.




