சிறந்த மனிதநேய விருதை பெற்ற சுந்தரபாண்டியன் பட நடிகர் – அட, இந்த நடிகரா ? அப்படி என்ன செய்தார்.

0
376
- Advertisement -

சமூக பணிக்காக சிறந்த மனிதநேய விருதை நடிகர் சௌந்தரராஜா வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சௌந்தரராஜா. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் குறும்பட இயக்குனரும் ஆவார். இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சுந்தர பாண்டியன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சசிகுமார், சூரி, விஜய் சேதுபதி, லட்சமி மேனன் உட்பட பலபேர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சௌந்தரராஜா. இந்த படத்தை தொடர்ந்து இவர் ரெக்க, தெறி, சங்கத்தமிழன், வேட்டை, பட்டறை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை மற்றும் ரெக்கார்டிங் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சௌந்தர்ராஜா குறித்த தகவல்:

தற்போது இவர் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக பணிக்காக நடிகர் சௌந்தரராஜாவிற்கு சிறந்த மனிதநேய விருது கிடைத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல்ஆகி வருகிறது. அதாவது, Take care international foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு pride of humanity என்ற விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.

சௌந்தர்ராஜா ஆற்றிய சமூக பணி:

அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழக முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரச் செடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக் கூறி பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் நடிகர் சௌந்தர்ராஜா. இவர் பல சமூக சேவையை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவருக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேசியா கோலம்பூரில் வழங்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:

இந்த நிகழ்ச்சியில் மலேசியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (Deputy Director of police – Malaysia Royal police) மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் பேரன் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், Take Care International foundation நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

விருது வாங்கிய சௌந்தரராஜா கூறியது:

மேலும், இந்த நிகழ்ச்சியில் விருதைப் பெற்ற சௌந்தர்ராஜா அவர்கள் கூறியிருப்பது, மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும், இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காகவும் உழைப்போம். இந்த விருதை நான் விவசாயிகளுக்கும், இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் சௌந்தர்ராஜன் விருது வாங்கியிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement