மறைந்த கே வி ஆனந்த் மகளின் திருமணத்திற்கு சூர்யா வராதது குறித்து வருத்தத்துடன் ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் கே.வி.ஆனந்த். புகைப்பட பத்திரிகையாளரான இவர் ஆரம்ப காலத்தில் கல்கி, இந்தியா டுடே போன்ற பல்வேறு கல்கி, பத்திரிகைகளில் வேலை செய்திருக்கிறார். பின்னர் இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராம் இடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார்.
அதன் பின் இவர் மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு கேவி ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. மேலும், கே வி ஆனந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். அதிலும், குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.
கே வி ஆனந்த் திரைப்பயணம்:
அதை தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் முதன் முதலில் இயக்கிய படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர் இவர் அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார். இதனை அடுத்து இவர் தன்னுடைய அடுத்த படம் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் இவர் சிகிச்சை பலனின்றி கே வி ஆனந்த் காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
கே வி ஆனந்தின் மகளின் திருமணம்:
இப்படி ஒரு நிலையில் இவருடைய மகளுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் விஷ்ணுராஜ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்கள் இருவருமே ஆர்க்கிடெக் படித்திருக்கிறார்கள். கே வி ஆனந்த் மகளின் திருமணம் எலும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. மேலும், இந்த திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள். ஆனால், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
திருமணத்தில் கலந்து கொள்ளாத சூர்யா:
குறிப்பாக, சூர்யாவை வைத்து காப்பான், அயன் மாற்றான் போன்ற மூன்று படங்களை கே வி ஆனந்த் இயக்கியிருந்தார். ஆனால், சூர்யா திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று பலரும் கேள்வி இருக்கின்றார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் ரசிகர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன்… அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது.
With LEGEND'S ❤️🙏 at shri. KV.ANAND sir
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) July 6, 2023
daughter wedding Function…. pic.twitter.com/jtiIsCgdwN
ரசிகர்கள் பதிவு:
KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை. ஆனால், விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம். நல்ல மனம் வாழ்க.” என ஜெயம் எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கலை இயக்குநர் கிரண் புலம்பல்: “ஆமாம்.. நம்பமுடியவில்லை தான் ஆனால் இது தான் உண்மை என புரிந்தது. என்ன செய்வது, அவ்வளவு தான் உலகம் போல என நினைத்து மனதை தேற்றிக்கொள்ள மட்டுமே முடிந்தது.” என கே.வி. ஆனந்த் படங்களில் கலை இயக்குநராகவும் ஒரு சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்த கலை இயக்குநர் கிரண் நடிகர் சூர்யா வராதது வருத்தத்தை அளிக்கிறது.