மனுசனா செந்தில் பாலாஜியை பிடிக்கும்- திருவண்ணாமலை கோவிலில் மனம் உருகி வேண்டிய தாடி பாலாஜி

0
1749
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக தாடி பாலாஜி பிரார்த்தனை செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை சில தினங்களுக்கு முன் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தார்கள். மேலும், இவரின் கைதுக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வழக்கம் போல் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் யூக்த்தியை பயன்படுத்தி நெஞ்சு வலி வந்து விட்டது என்று கூறினார். இதன் காரணமாக செந்தில் பாலாஜி சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக தாடி பாலாஜி டீவ்ட் ஒன்று போட்டுஇருக்கிறார்.

- Advertisement -

தாடி பாலாஜி டீவ்ட்:

அதில் அவர், திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் ஜீவசமாதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூர்ண குறையும் அடைய வேண்டு என்று தாடி பாலாஜி பதிவு ஒன்றை போட்டிருந்தார். பாலாஜி அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி குணம் அடைய வேண்டும் என்று பதிவு ஒன்று போட்டு இருக்கிறார் இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும், செந்தில் பாலாஜிக்கும்- தாடி பாலாஜிக்கும் இடையே என்ன தொடர்பு என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தாடி பாலாஜி அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து தாடி பாலாஜி கூறியிருப்பது, நான் இந்த பதிவை சட்டரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ போடவில்லை. சக மனிதன் என்ற அடிப்படையில் தான் போட்டேன். அவரை மனுஷனாக எனக்கு ரொம்ப பிடிக்கும். நம்மால் முடிந்தது பிரார்த்தனை மட்டும்தான். எனக்கு எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் சந்தோஷம் வந்தாலும் நான் மூக்குப்பொடி சித்தரை தான் சந்திப்பேன். திருவண்ணாமலைக்கு போய் அந்த மூக்குப்பொடி சித்தரிடம் மனம் உருகி வேண்டிக் கொண்டால் நல்லது நடக்கும் என்று ஒரு நம்பிக்கை.

-விளம்பரம்-

அமைச்சர் உடல் நிலை குறித்து சொன்னது:

வேண்டுதலுக்கு பிறகு அவர் உடல்நிலை தேரும் என்கிற நம்பிக்கையில் தான் போய் கும்பிட்டு வந்தேன். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் அவருக்காக பிரார்த்தனை செய்ய சொன்னேன். அவரை நட்பு ரீதியாக நான் நான்கு முறை சந்தித்து இருக்கிறேன். அவர் குறித்த செய்தியை கேள்விப்பட்டு டிவியில் பார்க்கவும் செய்தேன். பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அதனால் தான் அவருக்காக பிரார்த்தனை பண்ணனும் என்று நினைத்து செய்தேன். சீக்கிரம் அவர் உடல்நிலை தேறி வரணும் என்று கூறியிருக்கிறார்.

தாடி பாலாஜி திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. 1997 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுகாசினி நடிப்பில் வெளிவந்த படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். பின் இவர் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement