சொன்னதை போல ஜனநாதனின் மருத்துவ பில் முழுவதையும் கட்டிய நடிகர். மனுஷன்யா.

0
3119
jana
- Advertisement -

தேசிய விருதுபெற்ற இயக்குனர் ஜனனாதன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் (மார்ச் 14) காலமாகி உள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ஜெயம் ரவி ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகர் ஷாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தை தொடர்ந்து தமிழில் இவர், ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இயற்கை திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. தனது முதல் படமான இயற்கை படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார் ஜனநாதன். இறுதியாக ஜெயம்ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த ‘லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதையும் பாருங்க : கத்தி பட சம்பளத்த கேட்டதுக்கு மாஸ்டர்ல நடிக்க விடாம பன்னிட்டாங்க – புலம்பும் கவிஞர் கண்ணதாசனின் மகன். (அட இந்த நடிகர் தானா அவர்)

- Advertisement -

இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஜனநாதனின் மறைவிற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர். அந்த வகையில் ஜனநாதனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கண் கலங்கி அழுதார்.

பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, கண்கலங்கிய படி மலர்தூவிக் கொண்டே சென்றார். இந்த நிலையில் ஜனநாதனின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக விஜய் சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் வாக்கு கொடுத்து இருந்தார். ஜனநாதனின் மருத்துவச் செலவு முழுவதையும் நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக் கொண்டதாகவும் மருத்துவமனையில் நேற்று அவர் தனது சொந்த பணத்தில் மருத்துவமனையின் பில்லை செட்டில் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-
Advertisement