டீய் மட்டும் குடிச்சிட்டு தெரு தெருவா அலைஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும் – அஸ்வினுக்கு பிகில் பட நடிகர் கண்டனம்.

0
780
aswin
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘என்ன சொல்ல போகிறாய் ‘ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு பெரும் பேசு பொருளாக மாறியது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினனின் இந்த பேச்சு குறித்து நடிகர் விஜய் விஷ்வா (அபி சரவணன்) கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். தமிழில் குட்டி புலி, அட்டகத்தி, பிகில் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பரவை முனியம்மா கஷ்டபட்ட காலத்தில் உதவி செய்தவர் என்பது கூறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் அஸ்வினின் பேச்சு குறித்து பேசியுள்ள இவர்,

- Advertisement -

தூங்குபவனை தூங்க விட்டு வாய்ப்புக்காக ஏங்குபவர்களை ஏற்றி விடுங்கள் அண்ணன்மார்களே….

ஒரு படம் வெறும் வாய்ப்பு மட்டுமல்ல …
வாழ்க்கைக்கு சமம்….

-விளம்பரம்-

ஒரு படத்திலேயே அந்த பட இயக்குனரால் அடுத்த சூப்ர ஷ்டார் என பட்டம் பெற்ற அன்பு தம்பி #அஸ்வினுக்கு எனது கடுமையான கண்டனங்கள்…

டேய்….

ஒரு நடிகனா காலைல விடிய ஆரம்பிச்சு ராத்திரி அடையுற வரை உண்ணாம உறங்காம சாலிகிராமத்துல இருந்து விருகம்பாக்கம் வளசரவாக்கம் தெரு தெருவா எங்க சினிமா ஆபிஸ் இருக்கனு கூட தெரியாம டீய் மட்டும் குடிச்சிட்டு ஒரு நம்பிக்கையோட வாய்ப்பு தேடி அலைஞ்சிருந்தா இப்படி பேசியருப்பியா.??

இல்ல

ரூம் வாடகை கட்ட முடியாம ,வண்டிக்கு பெட்ரோல் போட முடியாம தள்ளிட்டு போயிருப்பியா? எப்பயாவது விசேசம்சொந்த ஊருக்கு கல்யாணம் காதுகுத்து தீபாவளி பொங்கல்னு எதுக்கும் போக முடியாம எப்ப நடிக்க படவாய்ப்பு கிடைக்குமோ ? அதான் உண்மயான திருவிழான்னு ஏங்கியிருந்தா இப்படி பேசியிரிப்பியா?

இல்ல

ஓவ்வோரு இயக்குனர்கள் ஆயிரம் கனவுகளோட அப்பன் ஆத்தா வறுமைய நினைச்சி, நண்பர்களோட உதவிய நினச்சு ,குடும்ப சூழ்நிலைய உணந்து,
ஓரு #பிரசவம் மாதிரி ஒரு #கதையை கருவாக்கி அதை உருவாக்கி கிடங்கிற ஐம்பது நூறு ருபாய கூட சாப்பிடாம சேத்து வச்சி கதய எழுதி அத கொஞ்ச கொஞ்சமா. டைப்பண்ணி பவுண்டடு புக் எடுத்து பொக்கிசமா பாதுகாத்தி அந்த கதய செல்ல காத்திருந்து இன்னையோட எல்லா கஷ்டமும் போயி நல்ல காலம் போறந்தாச்சின்னு அந்த நாப்பது உதவி இனை துணை #இயக்குனர்களும் நம்பிக்கையோட உன்கிட்ட கத சொல்ல வந்து இருப்பாங்கன்னு உணர்ந்திருந்தா இப்படி பேசியிரிப்பியா?

இல்ல

நல்ல கதை ,நல்ல இயக்குனர், நல்ல கதாநாயகன் ,அமைஞ்சிருக்கி எப்டியாவது படத்தெடுத்துடனும்னு ,கஷ்டப்பட்டு சேர்த்த காசு ,பணம் பத்தாம பிறந்த ஊர்ல இருக்கிற பூர்வீக வயக்காடுல இருந்து ஆத்தா அப்பன் இருக்கிற வீடு வரை மட்டுமில்லாம ஏன் பொண்டாட்டி புள்ளங்க நகை நட்டு வித்து நம்ம அத்தன பேருக்கு வேலையும் கொடுத்து சாப்பாடும் போடுற சாமிங்க அத்தன #தயாரிப்பாளர்களோட நம்பிக்கையும் மன தைரியமும் நினச்சிருந்தா நல்ல இல்லாட்டி படத்த #ரிலீஸ் பண்ண விட மாட்டேன்னு மேடையில எவ்வளவு திமிரா பேசியிரிப்பியா?

தம்பி அசூவினு.

“பசுன்னு சொன்னா பணிவு
மாடுன்னு சொன்னா திமீரு”

“நெல்லை கொட்னா அள்ளலாம்
சொல்லை கொட்னா??”

பாத்து பக்குவமா நடந்துக்க…ஏன்னா
உங்கம்மா ,எங்கம்மா ,இல்ல….

#. #சினிமா

அழகானா இருந்தா என்னடா தம்பி பெருமை??
அடக்கமா அன்பா. இருந்து பாரு ….அப்புறம்
நீயே நினைச்சாலும் தூங்க முடியாது…..
அண்ணன் என்ற உரிமையிலும்
சக நடிகன் என்ற நட்பிலும் கேட்கிறேன…

உனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement