இந்த 3 நடிகர்களுக்கு பிறகுதான் எனக்கு திருமணம் – விஷால் பரபரப்புப் பேட்டி

0
122
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஷால், ஹைதராபாத்தில் தன் திருமணத்தை குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். விஷால் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பு நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘செல்லமே’.

-விளம்பரம்-

அதன் பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளர், திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்றது. அதோட தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி’ என்று அழைக்கப்படும் விஷால் இப்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

விஷால் நடித்த படம் :

அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ரத்னம்’. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.

விஷாலின் காதல் விவகாரம்:

இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாதது ஏன் என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விஷாலிடம் ‘திருமணம் எப்போது?’ என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால், அனிஷா என்பவரை காதலித்து நிச்சயதார்த்தமும் நடந்த நிலையில் திருமணம் நடைபெறவில்லை. அதேபோல் விஷால், வரலட்சுமி மற்றும் லட்சுமி மேனனுடன் காதல் கிசுகிசுவில் கூட சிக்கி இருந்தார்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து விஷால்:

தற்போது 46 வயது ஆகும் நிலையில், நடிகர் சங்கம் கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம் என்று அவர் உறுதியாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறியிருந்தார். அதேபோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட தனது கடமைகளை அனைத்தும் முடித்த பின்னர்தான் திருமணம் என்றும் கூறியிருந்தார். இப்போது விஷால் ஹைதராபாத்தில் அளித்த பேட்டியில், ‘இந்த மூன்று நடிகர்களுக்கு திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம்’ என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருமணம் நடக்குமா என்ற சந்தேகம்:

அதேபோல், அவர் குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் சல்மான் கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகும். மேலும் 58 வயது ஆகும் நிலையில் சல்மான் கானுக்கு இனி திருமண வாய்ப்பே இல்லை எனவும், 41 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இதேபோல் 44 வயதாகும் பிரபாஸ், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தனது வாழ்க்கையில் ஒரு புதிய உறவு உருவாகப் போவதாக கூறியிருப்பதை அடுத்து அவரது திருமணம் மிக விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கொண்ட 3 நடிகைகளை விஷால் குறிப்பிட்டதால் அவரது திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Advertisement