தமிழில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா. இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ராஜதந்திரம் மாநகரம் சரவணன்இருக்கபயமேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி , சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபர போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார்.கடந்த 2014ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்தார் ரெஜினா. திரையில் இருவருக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது.
திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில கிசுகிசு நிலவுகிறது.அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டும் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.